அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Friday, March 21, 2008

குறியின் அளவு

எங்கள் அலுவத்தின் ஒரு பிரிவு (துரதஷ்டவசமாக நான் இருக்கும் பிரிவு) சென்னைக்கு அப்பால் செங்கல்பட்டுக்கு அருகில் ஒரு கிராமத்துக்கு குடி மாற்றபட்டு உள்ளது. தனியாருக்கு சொந்தமானதால் அருகில் எந்த சாப்பாடு கடைகளும் கூட கிடையாது. டீ குடிக்க கூட 15 நிமிடம் நடக்க வேண்டும். சென்ற வாரத்தில் ஒரு நாள் சூடு தாங்காமல் இளநீர் குடிக்க ரோட்டு பக்கம் வந்து நின்று கொண்டிருந்தபோது இளநீர் கடை பையனுக்கும் ஒரு (படித்தவர் போல தோன்றிய) வாடிக்கையாளருக்கும் நடந்த உரையாடலை கவனிக்க நேர்ந்தது. இளநீர் விலை பற்றிய விவாதமாக தொடங்கியது - ஒரு கட்டத்தில் அவர் - 'இப்படி அதிக விலை சொன்னால் கல்யாணத்துக்கு பிறகு உன் குறி சிறுத்து விடும்' என சொல்ல - பின் என்ன நினைத்தானோ அந்த பையன் அவர் கேட்ட விலைகே கொடுத்துவிட்டான். சில நாட்களுக்கு முன்பு நான் படித்த நளினி ஜமீலாவின் மற்றும் சாருவின் உரையாடல் தொகுப்பான பாலியல் என்ற நூலின் சில பாகங்களை நான் நினைவு கூர்ந்தேன். பெரும்பாலான ஆண்கள் தங்கள் குறியின் அளவு பற்றிய குழப்பங்களை கொண்டிருக்கிறார்கள் - மருத்துவ ரீதியான சில மனோதத்துவ ஆய்வுகளும் அதனை உறுதி செய்கின்றன. போதாகுறைக்கு டிவி டாக்டர்கள். நல்ல செக்ஸ் என்பது உடல் உறுப்புகளின் அளவுகளை அடிப்படையாக கொண்டது என்பது ஒரு மூட நம்பிக்கை. படித்தவர் படிக்காதவர் என எல்லாரிடமும் இந்த குழப்பம் இருக்கிறது. செக்ஸ் என்பது வெறும் உடல் உறவு கிடையாது என்கிறார் ஜமீலா - ஒரு பாலியல் தொழிலாளி என்ற நினைப்பில் இருந்து விலகி, செக்ஸ் என்பதை தொழில் முறை அனுபவமாக உணர்ந்தவர் என்ற நிலையில் அவர் கருத்து மிகவும் ஏற்று கொள்ளதக்க ஒன்று. உள்ளம் பகிர்தலின் அடுத்தநிலை உடல் பகிர்வு. உள்ளம் பகிர்தலே முழுமையாக இல்லாத சமுதாய அமைப்பில் - திரும்பிய இடம் எல்லாம் அவசர கோல கல்யாணங்களும் மாதா மாதம் நீளும் விவாகரத்து விவகாரங்களும். இந்த லட்சணத்தில் செக்ஸ் கல்வி வேண்டாம் என்ற கோஷம் வேறு. இதற்கு பதில் எல்லாரும் காட்டு மிராண்டிகளாகவே இருந்திருக்கலாம்.

No comments: