அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Sunday, March 23, 2008

காகித பூக்களின் காலம்...

வசந்த காலத்தை வரவேற்க்கும் வண்ணங்களின் பண்டிகை கொண்டாடபட்டு கொண்டிருக்கிறது. நான் வசிக்கும் பகுதியில் வட இந்திய குடும்பங்கள் உண்டு. 2 நாட்களாக அவர்களின் கொண்டாட்டங்களை ரசித்து கொண்டிருக்கிறோம். பொதுவாக வட இந்தியர்கள் இத்தகைய பண்டிகைகளை விமர்ச்சையாக கொண்டாடுகிறார்கள். பிள்ளையார் சதுர்த்தியும் தீபாவளியும் போல. தென் இந்தியாவில் மட்டும்தான் இவை அரசியலாக்க படுகின்றன.

அத்வானி சோனியா காந்தியின் வீட்டுக்கு மனைவியோடு சென்று வாழ்த்துகிறார். லாலுபிரசார் நிதிஷ் குமாரை சகோதரர் என சொல்லி வாழ்த்துகிறார். அரசியல் தாண்டிய மனித நட்புணர்வு இருப்பதாக நான் கொள்கிறேன். பெறும்பாலான அரசு விழாக்களில் அவர்கள் மகிழ்ச்சியாக பேசி கொண்கிறார்கள். சிலர் சொல்லலாம் - இவை எல்லாம் வெறும் அரசியல் நடிப்பு என - இருந்துவிட்டுதான் போகட்டுமே, நடிப்புக்காகவாவது நட்பும் சகமனித நேசமும் இருக்கிறதே.. தென் நாடு அப்படி அல்ல.. அரசியல் எதிரிகள் கூட்டாக விழாக்களில் கலந்து கொள்ள கூட மாட்டார்கள், தொண்டர்கள் அதைவிட மேல்.அரசியல் இப்படி என்றால் மக்களும் வேறுவிதம்.

வட இந்திய மக்கள் கொண்டாடுவது போல நெருக்கமான விழா கொண்டாட்டங்கள் தென் இந்தியாவில் இல்லை. வளர்ந்த அறிவியல் கை-தொலைபேசியில் வாழ்த்தி குறும் செய்தி அனுப்புவதோடு உறவுகளை எல்லை படுத்தி விடுகிறது. தொலைகாட்சியில் அழைத்து பிறந்த நாள் வாழ்த்து சொல்லி பாட்டு போட சொல்கிறார்கள். கூட்டு குடும்ப விழாக்கள் மிகவும் அறிதாகிவருகின்றன - நகர சூழலும், கார்பரேட் கலாச்சாரமும் இன்னும் அவற்றை அரிதாக்குகின்றன. அலுவலகத்தில் தொழிலாளர்களிடையே சிறு நிகழ்ச்சிகளும் கூட்டு விளையாட்டுகளும் நடத்தி என்ன லாபம். அவை எல்லாம் மறுபடி தொழிலார்களை கொஞ்சம் அதிகம் வேலை வாங்க ஏற்பாடு செய்யும் சுயலாப நோக்கே அன்றி வேறில்லை. குடும்பம் அலுவலகம் சாராத வெளிநட்பு என்பதெல்லாம் பலி கொண்டு விட்டு - Employee Engagement Initiatives (EEI) - நடத்துவதில் என்ன பயன் இருக்கிறதோ தெரியவில்லை.கடிதகங்கள் குறைந்து மின்னஞ்சல் அதிகமாகிறது. கடிதங்கள் எழுத பிரயத்தனபட வேண்டி இருந்தது. முக்கிய நிகழ்ச்சிகளை சொல்வோம், கருத்துகளை சொல்வோம், அனைவரையும் விசாரிப்போம், கடித வார்த்தைகளில் அன்பு இருந்தது. இன்றெல்லாம் மின்னஞ்சல் கூட குறும் செய்தி போலதான் இருக்கிறது. நீண்ட நட்பு அல்லது உறவுமுறை கடிதங்கள் என எதுவுமே இல்லை. வளரும் அறிவியல் உலகத்தை சுருக்கிவிடலாம் - ஆனால் சகமனிதனை, உறவுகளை, அடுத்து உள்ளவரை மிகவும் தொலைவாக்கிவிட்டது. எதிர்பார்ப்புகளையும் ஏமாற்றங்களையும் மன அழுத்தத்தையும், சத்தமில்லாத அழுகைகளையும் அதிகமாக்கி இருக்கிறது. வட இந்தியர்கள் போல கூடி கொண்டாடும் விழாக்கள் மட்டுமே சகமனித சகோதரதுவத்தை கொஞ்சமாவது மிச்சம் வைக்க உதவும். முடிந்தவரை நேரில் வாழ்த்து சொல்லலாம், அடிக்கடி சந்திக்கலாம், மாதம் ஒருமுறையாவது நண்பர்கள் கூடி படித்தவை, பார்த்தவை என பகிர்ந்து கொள்ளலாம், சில நீண்ட கடிதங்கள் எழுதலாம். இவை எல்லாம் ஊருக்கு உபதேசம் மட்டுமல்ல. நானும் கடைபிடிக்கவேண்டிய விஷயங்கள்தான்.

No comments: