அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Wednesday, March 12, 2008

ஸ்டெல்லா புரூஸ் மரணம்

6 மாதங்களுக்கு முன்னர் சிறுநீரக கோளாறு காரணமாக மனைவின் இழப்புக்கு பிறகு தனிமையில் வாழ்ந்த ஸ்டெல்லா புரூஸ் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். 67 வயதான அவர் தன் மனைவின் மரணத்துக்கு பிறகு ஆனந்தவிகடன் பத்திரிக்கையில் பேசும்போது தனிமை எனும் மிகப்பெரிய வாழ்வின் துயரம் பற்றி பேசியிருந்தார். அந்த தனிமை இன்று அவர் மரணத்துக்கு காரணமாகிவிட்டது. குழந்தைகள் இல்லாத இந்த தம்பதியின் வாழ்க்கை - மனைவி எனும் துணைக்கு பின்னான தனிமை என நிறைய இருக்கிறது. ஆண் தன் வாழ்வின் ஒரு புள்ளிக்கு பிறகு தன் துணை மேல் ஆத்மரீதியான உணர்வு கொள்கிறான் - பெண்களும் அப்படியே - பிள்ளைகள் இல்லாத அல்லது பிள்ளைகளுடன் இல்லாத வயதான தம்பதியினரின் வாழ்க்கை பிரச்சனைகளை நகரங்கள் இன்று அதிகம் சந்திக்கின்றன. ஆன்மீக பத்திரிக்கைகளும், நியூஸ்பேப்பரும், டெலிவிஷனும் கொடுக்கும் ஒரு கடினமாக உலகத்திலேயே பெரும்பாலான முதியவர்கள் வாழ்கிறார்கள். அவர்களுடன் பேசவும் எதுவும் பகிர்ந்து கொள்ளவும் யாரும் இருப்பதில்லை. சில முதியோர் இல்லங்களிலும், திருச்செந்தூர் போன்ற இடங்களில் சந்தித்த தெருவில் வாழும் வயதானவர்களும் - இன்னும் ஏதோ ஒரு பிடிப்பில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். மரணம் மட்டுமே அவர்களுக்கான விடிவாக இருப்பதாக எண்ணி - அதனை எதிர்நோக்கி ஓவ்வொரு நாளையும் கழிக்கிறார்கள். எத்துனை மன அழுத்தமும் தனிமையும் இருந்திருந்தால் 67 வயதான முதியவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டிருப்பார்...! சமுதாயத்தின் ஒரு பங்கான முதியவர்கள் பற்றி யோசிக்க நேரம் மட்டுமல்ல கொஞ்சம் மனமும் வேண்டும்.

No comments: