அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Monday, March 03, 2008

குருவின் இழப்பு

எழுத்தாளர் சுஜாதா - இன்றைய எல்லா எழுத்தாளர்களுக்கும் ஒரு மானசீகமான குரு. பெரும்பாலான வலைபூ எழுத்தாளர்களுக்கு ஒரு முழுமையான ஆசான். உரைநடை, எழுத்து அமைப்பு, கருத்து வெளிப்பாடு, மென்மையான நகைச்சுவை, எந்த துறையிலும் துல்லியமான விவரங்கள், படிக்கும்போதே விரியும் காட்சி அமைப்பு மற்றும் புத்திசாலிதனமான உரையாடல் என அவரின் ஆளுமை செல்லாத இடமே இல்லை. எல்லா துறைகளை பற்றி படிக்கும் பழக்கத்தையும், இன்றைய படிக்கும் மனிதர்களிடையே இருக்கும் மனோபாவத்துக்குரிய எழுத்து முறை மாற்றத்தையும் அவரை தவிர வேறு யாரும் அறிமுகபடுத்தவில்லை. பார்பன எண்ணங்களை விதிக்கிறார் என்ற குற்றசாட்டுகளையும் தாண்டி வெகுஜன மற்றும் குறும்பத்திரிக்கை, சினிமா, ஆன்மீகம், அறிவியல், மெல்லிய நகைச்சுவை, வாழ்க்கை பற்றிய நிதர்ச்சனங்கள் என எல்லா பிரிவுகளிலும் ஒரு சகஜமான நட்புணர்வு அவர் எழுத்துகளில் இருந்தது. அவர் மறைவு - தமிழ் எழுத்து உலகத்துக்கு ஒரு பெறும் இழப்பு - ஒரு குருவின் இழப்பு போல.

No comments: