அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Sunday, March 23, 2008

நிஜமும் நிழலும்..

வட இந்தியாவின் ஒரு சிறைசாலை. சிறை கைதி மிகவும் வயதானவர். ஆயுள் தண்டனை பெற்றவர். அவருக்கு மணமாகாத ஒரு பெண். தன் பெண்ணின் திருமணவாழ்க்கை பற்றிய கவலையுடன் இருந்த அவர், சிறைசாலை அதிகாரிகளிடம் தன் மனதை பகிர்ந்து கொள்ள, அவர்கள் மற்ற சிறைக்சாலை பணியாளர்களுடன் சேர்ந்து பணம் வசூலித்து கைதியின் மத முறைப்படி மிக நல்ல முறையில் திருமணத்தை நடத்தி வைத்து இருக்கிறார்கள். திருமண தம்பதி சிறைசாலைக்குள் வந்து ஆசீர்வாதமும் பெற்றிருக்கிறார்கள். சட்ட விதிமுறைகளின் படி இது தவறு எனினும், மறுபக்கத்தில் இது ஒரு நல்ல மனிதநேய எடுத்துகாட்டு. சிறைகைதியின் அடிப்படை உணர்வுகள் மதிக்கபட்டு, பொருளாதார சூழல் கருத்தில் கொள்ளபட்டு செய்யபட்ட ஒரு நல்ல உதவி. அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளால் பாதிப்பு ஏற்பட்டாலும் கூட மனதளவில் நல்லது செய்த ஒரு திருப்தி சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இருக்கும். நடவடிக்கை எடுக்க அரசாங்கம் சொல்லும் காரணம் சிறைசாலைக்குள் சம்பந்தம் இல்லாத வேறு மனிதர்கள் வரக்கூடாது என்பதுதான். அப்புறம் ஒரு நாள் தொலைக்காட்சி பார்க்கும்போது ஒரு குழப்பம் வந்தது. வட இந்திய அல்லது தென் இந்திய திரைப்படங்கள் என்ற எல்லை இல்லாமல், பெறும்பாலும் சிறைச்சாலைகளுக்குள் குத்தாட்ட பாடல்கள் இருக்கின்றன - சம்பந்தமே இல்லாமல் அரைகுறை உடையில் ஒரு அழகி(?) வேறு. இது எல்லாராலும் ரசிக்க படுகிறது. அடிப்படை கேள்விகள் கூட எழுவதாக தெரியவில்லை. நிழலின் அபத்தமும், நிஜத்தின் நெகிழ்ச்சியும் இரு வேறு துருவங்களாகவே இருக்கின்றன.

No comments: