அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Wednesday, March 12, 2008

முருகன் என்றொரு ஓவியர்

முருகனை பாண்டிசேரியின் கடற்கரை சாலையில் நானும் தோழியும் சந்தித்தோம். அப்போது அவர் ஒரு சிவன் உருவத்தை தரையில் வரைந்து கொண்டிருந்தார். கொஞ்சமாய் குடித்திருந்தார் - எனினும் தெளிவாக பேசினார். அவர் பேச்சின் ஆதங்கம் தான் மதிக்கபடவில்லை என்பது மட்டும்தான். குடும்பம் உள்ளவர் - குடும்பத்தை விட்டு விலக்கி வைக்கபட்டு இருப்பவர். சினிமா, பேனர் துறை என தொழில் செய்து இருக்கிறார் - தொழிளாலர் சங்கத்தில் பதிவு செய்ய பணபலம் இல்லாமல் தெருவில் வரைகிறார். சுயமரியாதையும் கலை ஆர்வமும் அவருடன் பேசும் போது புரிந்து கொள்ள முடிகிறது. இந்தியா முழுவதும் பயணம் செய்திருப்பதாக சொல்கிறார். ஏதோ ஒரு புள்ளியில் என் வாழ்வும் அவர் வாழ்வும் ஒன்றுபட்டு இருப்பதாக தோழியிடம் சொன்னேன். அவரை சந்திக்கும் சில நிமிடங்களுக்கு முன்னால் - என் வாழ்வின் இழந்த சந்தோஷங்களை பற்றி நான் அவளுடன் பேசி கொண்டிருதேன். ஒரு வகை புலம்பலாக கூட இருந்தது அது. ஒருவகையான துறவற-வாழ்வுக்கு போக வேண்டும் என்ற எண்ணம் பற்றி நான் பேசிய கருத்துகள் - முருகனை பார்த்தவுடன் கொஞ்சம் அந்த வாழ்வை பற்றிய ஒரு பயத்தை தோற்றுவித்தது உண்மை.

1 comment:

saravdotnet said...

Are you married? If not, you should get married. :)