அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Sunday, October 08, 2006

சினிமா - பார்வை கோளாறுகள்.

நல்ல இசை, திறமையான சண்டை காட்சிகள், அற்புதமான ஒளிப்பதிவு, சொல்லி கொடுத்தால் திறமை காட்டும் நடிகர்களும் நடிகைகளும்... இருந்தும் இந்திய சினிமாவில் வருடத்துக்கு மிக சில நல்ல திரைப்படங்களே வெளிவருகின்றன. இந்தியாவின் அனைத்து பகுதி திரைப்படங்களையும் குறிப்பிட்டாலும் வெறும் 20 சதவீதம் மட்டுமே அகில உலக சினிமா விழாக்களில் கலந்து கொள்ளும் தகுதியை பெறுகின்றன. அதுவும்
பாடல்களையும் சண்டை காட்சிகளையும் நீக்கிய பிறகு (பெறும்பாலும் இவை நிஜம் சார்ந்து இருக்காததால்). திரைப்பட விழா படங்களிலும் குறும்படங்களிலும் பெறும்பாலும் தெளிவான திரைக்கதையும் பாத்திர அமைப்புமே முன்னுறிமை பெறுகின்றன என்றாலும் இசை, ஒளிப்பதிவு, நடிப்பு ஆகியவனவும் கருத்தில் கொள்ள படுகின்றன. இன்றைய நிறைய தமிழ் படங்களை பார்க்கும் போது 3 நாள் பாம்குரோவில் ரூம் போட்டு, 4 புல்
பாட்டில் ரம்மும், மூன்று நேரமும் கோழி பிரியாணியும், பர்மா பஜார் டிவிடிகளும் இருந்தால் போதும் என்று தோன்றுகிறது. சமீபத்தில் வந்த ஒரு இயக்குனர் நடிகராக நடித்த வழக்கமான ரவுடியிஸ திரைப்படம் ராம் கோபால் வர்மாவின் திரைப்படத்தின் அப்பட்டமான காட்சி தழுவல். கதை கொஞ்சம் மாற்றபட்டு காட்சிகள் (கோணம், ஒளி உட்பட) அனைத்தும் அப்பட்டமான தழுவல். தெலுங்கில் இருந்து ரீமேக் செய்யபடும் தமிழ் படங்கள்
இன்னொரு வகை கொடுமை.. லாஜிக் என்ற வார்த்தையை குழி தோண்டு நிறைய உப்பு போட்டு உயிரோடு புதைத்து விடுகிறார்கள்.. திரைக்கதையும் பாத்திர அமைப்பும் நிறைய கதைகளில் இருப்பதில்லை. நல்ல திரைப்படங்கள் நாவல்களில் இருந்து உருவாக்க படுகின்றன. அவை மனித வாழ்க்கையை, வாழ்வின் பிரதிபலிப்புகளை, மனித உறவுகளின் வலிமையை சொல்கின்றன. உலகின் எந்த போற்றபடும் திரைப்படத்தையும் எடுத்து
பாருங்கள். அவற்றில் இவை இருக்கும். சமீபத்தில் பார்த்த ஒரு நல்ல திரைப்படம் சித்தார்த்தா... அமைதி தேடும் துறவியையும் அவன் வாழ்க்கையும் சொல்லும் சுலபமாக புரிய கூட ஆங்கில படம். இன்னொரு திரைப்படம் கல்லூரி வாழ்க்கைக்கு பிறகு மாற்றமடையும் மனித வாழ்க்கை பற்றி பேசும் ஒரு திரைப்படம்... ஒருவன் தொழில் அதிபர், ஒரு பெண் - கலெக்டர் மனைவி - இன்னொருவன் நக்ஸலைட்...இவர்களின் உறவு சிக்கல்கள்.. அரசியலும் நிஜமும் கலந்த பின்னனியுல். மற்றுமோர் திரைப்படம் - அகதியாக வந்து மக்கள் தலைவனாக உயரும் ஒரு கருப்பின சமூக கதை... இந்த திரைப்படங்கள் எந்த வித கதாநாயகதனமோ கிடையாது... பாடல்கள் பிண்ணனியில் மட்டும்.. தெளிவான அதிக புத்திசாலிதனம் காட்டாத வசனங்கள். நல்ல ஒளி ஒலி அமைப்பு... ஆரவாரமில்லாத நடிப்பு.. ஒரு திபேத்திய திரைப்படம் சென்னையில் திரையிடபட்ட போது அதில் வரும் 15 நிமிட உடலுறவு காட்சி மட்டுமே பெரும்பாலும் பேசப்பட்டது உச்சகட்ட முட்டாள்தனம். பெரும்பாலும் இந்த திரைப்படங்களை திரையிடும் அரங்குகளில் கூட்டம் இருப்பதில்லை. யாராவது சில காதல் ஜோடி (காந்தி மண்டபத்திலோ வள்ளுவர் கோட்டத்திலோ இடம் கிடைக்காதவர்கள்)அல்லது கொஞ்சம் தாடி வைத்த திரைப்பட ஆர்வலர்கள், அபூர்வமாக சில வெளிநாட்டினர்...மற்றபடி யாரும் ஓடி விளையாடும் அளவுக்கு இடம் கிடக்கிறது. செலவுக்கு பயந்து என் போன்ற ஆசாமிகள் டிவிடியில் திரைப்படங்களை பார்ப்பதும் காரணமாக இருக்கலாம்... நல்ல சினிமா நல்ல நாவலில் இருந்து கிடைக்கிறது. நல்ல நாவல் விற்பது இல்லை.

2 comments:

Anonymous said...

very correct. After this blog when i think about the films which i saw i too realize there cud be just one or two which have been the ones, like those you have mentioned. Really i will have to think twice the next time i'm thinking of going for a movie!
thnx - suchitra

Anonymous said...

If you get to see "Gods Must Be Crazy" dont miss it. One movie which you will enjoy watching! - suchitra