அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Sunday, October 08, 2006

கலாச்சார பாதுகாப்பும் பெண்ணும்

கலாச்சார பாதுகாப்பு பற்றி மறுபடியும் ஒரு பதிப்பு... யாராவது கொடும்பாவி கொழுத்துவதாக இருந்தால் பாண்டிபஜாரில் டிராபிக் இல்லாத நேரத்தில் கொழுத்தலாம்... போன் செய்து திட்டுபவர்கள் அலுவக நேரம் தவிர மற்ற நேரங்களில் தொடர்ப்பு கொள்ளவும். சமீபகால (திடீர்) கலாச்சார பாதுகாப்பு நிகழ்வுகளை பார்க்கும் போது பெரும்பாலும் அவை பெண்கள் தொடர்ப்பாகவே இருப்பதாக எனக்கு தோன்றுகிறது (அது உள் மன பிராந்தி என்பவர்கள் கொஞ்சம் விளக்கவும்...). சமீபத்தில் வந்த ஒரு திரைப்படம். மனைவி கணவனின் காதலை போற்றி, அவனின் பழைய காதலியை கூட்டி வந்து அவனுடன் ஒரு நாள் தங்க வைக்கும் காதல் கதை... வசனங்கள் காதலையும் புரிதலையும் அதன் உள்ளார்ந்த மன முதிர்ச்சியையும் சொல்லும் போதிலும்... கதையின் ஒரு வரி தெளிவாக சொல்வது - "மனைவி தன் கணவனின் காதலை மதித்து அவன் காதலியை மீண்டும் அவனுடன் ஒரு நாளாவது சேர்ந்திருக்க வைப்பது". என் கருத்து இந்த ஒரு வரியில் தான். எந்த கணவனாவது தன் மனைவியின் காதலை மதித்து, அவளுடைய பழைய காதலனை ஒரு நாளாவது (பகலிலாவது) தனிமையில் - தன் வீட்டில் தனித்திருக்க அனுமதிப்பானா... இந்த கருத்துடன் தமிழ் கூறும் நல்லுலகில் ஒரு திரைப்படம் எடுக்க முடியுமா..!!! எல்லா கலாச்சாரம் சார்ந்த விஷயங்களும் ஏதோ ஒரு வகையில் பெண்ணை (உடல் ரீதியாக பெண்ணை - இதனை கற்பு என்றும் சொல்லி கொள்கிறார்கள்.. ) சார்ந்தே அமைந்திருக்கின்றன என்பது என் கருத்து. ஆணுக்கு தன் ஆளுமை (பச்சையாக சொல்வதென்றால் - மனம் மற்றும் உடல் சார்ந்த ஆளுமை) மேல் கொண்ட அதிருப்தியும் சந்தேகமுமே ஆண் வலியுருத்தும் பல கலாச்சாரம் சார்ந்த அமைப்புகளுக்கு கரு. உயிர், பயர், கபி அல்விதா நா கெஹனா ஆகிய திரைப்படங்கள் சொல்லும் உணர்வு சார்ந்த உறவுகள் மிக சுலபமாக கொச்சைபடுத்தபடுவதற்க்கும் இதே அதிருப்தி + சந்தேக உணர்வுதான் காரணம். தான் தனிமைபடுத்தபட்டு விடுவோம் என்ற பயம் இதன்
அடிநாதம். பெண்களின் சமுதாய உயர்வு மற்றும் குடும்ப அமைப்பில் உயர்வு ஆகியவை காலம் காலமாக தடுக்கபட்டு வந்த காரணமும் இதுதான் என்பது கொஞ்சம் வரலாறு படித்த நண்பர்களுக்கு புரியும். படித்த பெண் யோசிப்பாளாகவும், யோசிக்கும் பெண் மிக சுலபமாக தன் வாழ்க்கையை அமைத்து கொள்வாளாகவும் ஆண்கள் புரிந்து வைத்து கொண்டு இருக்கிறார்கள். ஒரு திரைப்பட வசனம் உண்டு.. "காதல் என்பது.. சம்பந்தபட்டவர்கள்
பேசி கொள்வது... அடுத்தவரை முன்னேற்றுவது... உணர்வு அடிப்படையில் முதிர்ச்சி அடைய வைப்பது... " எத்துனை ஆண்கள் காதலை அப்படி புரிந்து கொள்கிறார்கள்.. பெரும்பாலும் பெண்களே அத்தகைய மன முதிர்ச்சியுடன் இருப்பதில்லை என்பது கசப்பான உண்மை. உங்கள் கருத்துக்களை எனக்கு சொல்லுங்கள்...

No comments: