அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Sunday, October 08, 2006

மொழி காவலர்கள்

மொழிக்காவலர்களாக தங்களை காட்டி கொள்ளும் மொழி ஆர்வலர்களை நான் கேட்க நினைக்கும் கேள்வி. இன்றைய இந்தியாவின் தொழில் புரட்சி முக்கியமாக கணிப்பொறி மற்றும் தொலைதொடர்ப்பு. இவற்றில் வேலை செய்ய ஆங்கிலம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். சுந்திர இந்தியாவில் தொழில் ரீதியாக முன்னேறிய அனேகம் பேர் தாய்மொழி தவிரவும் மற்ற மொழிகளிலும் கொஞ்சம் புலமை பெற்றிருந்தது உண்மை. இந்த
அடிப்படையில்லாத மொழி காவலர்களால் படித்த இளைய சமுதாயத்துக்கு எந்த பயனும் இல்லை(நம் கல்வி முறையே இன்றைய வாழ்க்கை முறைக்கு பொருத்தம் கிடையாது என்பதும் என் வாதம்). எங்கு எந்த மொழி உபயோகபடுத்த பட வேண்டிய தேவை உள்ளதோ - அங்கே அந்த மொழி உபயோகம் செய்வதில் தவறேதும் இல்லை. பிடிவாதமாக தாய்மொழிதான் எல்லா இடங்களிலும் வேண்டும் என்றால் - மொழி காவலர் நண்பர்களே -
உங்கள் வாழ்க்கையில் ஒரு மாதம் முழுக்க முழுக்க தாய்மொழி மட்டுமே புழங்கி - அதே தாய்மொழியால் ஒரு 100 பேருக்காவது நல்ல பொருளாதார அமைப்பில் வேலை வாங்கி கொடுத்து பிழைக்க வையுங்கள் - அதனை முன்னுதாரணமாக காட்டுங்கள். பின்னர் - உங்கள் தாய் மொழிக்கான போராட்டங்களை தொடருங்கள்.. உங்களுக்கு என் இதயபூர்வமான வாழ்த்துக்கள்.

No comments: