அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Sunday, October 08, 2006

தெருவிழாக்கள்...

சில வாரங்களுக்கு முன்பு நான் தங்கியுள்ள பகுதியில் உள்ள கோவிலில் திருவிழா. சென்னையில் கோவில் திருவிழா பாடல்கள் கூட கொஞ்சம் முரட்டுதனமாகவும் மரியாதையில்லாமலும்தான் இருக்கின்றன.. வருவியா..வரமாட்டியா என சாமியையே கொஞ்சம் மிரட்டுகிறார்கள். அப்புறம் மேடை போட்டு ஆட்டம். சினிமா பாடல்களுக்கு விடலை பசங்களின் குத்தாட்டம்.. கூட்டத்தில் நிற்க்கும் இளம்பெண்களை குறிவைத்த
சினிமாத்தனமான ஆட்டம். 50 ரூபாய் டிசர்ட்டும் 100 ரூபாய் ஜீன்ஸும் போட்ட சூர்யாக்களும், விக்ரம்களும், விஜய்களும்...கூட ஆடும் ஜோதிகாக்களும், சினேகாக்களும்.. இன்னும் பிற கதாநாயகிகளும். ஒரு குறிப்பிட்ட வயதில் தன்னை ஒரு பிரபலமான நடிகராகவோ, நடிகையாகவோ.. கொஞ்சம் அவர்களின் சாயலாகவோ நினைத்து கொள்ளும் போதையின் விளைவு இது... கோவில் திருவிழாக்கள் இதற்க்கு நிறைய வழிவகை
செய்கின்றன. முன்னரெல்லாம் ஆர்கெஸ்டிரா வைப்பார்கள்...எ.ஆர் ஈஸ்வரியின் போதை பாடல்கள் நிச்சயம் இருக்கும். கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம்.. கூத்து.. காணாமல் போய்விட்ட விஷயங்கள் நிறைய உண்டு திருவிழாக்களில். எங்கள் ஊரில் தேர் திருவிழா நேரத்தில் நாடகம் போடுவார்கள். கோழி சண்டை உண்டு... வழக்கமான கரகாட்டம் உண்டு. கரகாட்டம் என்ற பெயரில் ஆண்களும் பெண்களும் சிரிப்பை அடக்கி கொண்டு
ரகசியமாய் ரசிக்கும் காம வேடிக்கைகள்...பாட்டுகள்.. அதன் அர்த்தங்கள் சிலருக்கே புரியும்.. புரியாதவர்கள் விடலைகள்.. பல அர்த்தங்களை கொண்டு சிரித்து கொள்ள வேண்டியதுதான்.. சில வீடுகளில் வி.சி.ஆர் வைத்து படம் போடுவார்கள். ஊர் ஊராய் வரும் சினிமா வண்டி (கடலை காட்டுக்குள் திரை கட்டி படம் போடும் குழு) வந்தால் கூட்டம் அங்குதான் இருக்கும். பெறும்பாலும் எம்.ஜி.ஆர் படங்கள்... கொஞ்சம் வசதிபடைத்த விடலைகளுக்காக (மீசை நரைத்த பெரிசுகளுக்கும்தான்) ரெக்கார்டு டான்ஸ்... பெறும்பாலும் ஊருக்கு வெளியே... சில சமயம் அது வெட்டு குத்து அளவுக்கு போவதுண்டு.. ரெக்கார்டு டேன்ஸ் பெண்கள் ஆண்களுக்கு பெண் வேடம் போட்டது போல இருப்பார்கள். வெகு அரிதாக அழகான பெண்களும் வருவதுண்டு... ஆனாலும் மொத்த ஆட்டத்தில் சில நிமிடங்களே வரும் சுத்தி சுத்தி ஆடும் அழகுக்காக சாராயமும், வருத்த கறியும் காசும் கொண்டு பார்த்து விட்டு.. "போன தடவ மாதிரி இல்ல மாப்ள.. " என்று வருத்தபட்டு கொண்டு வரும் சமுதாயம்.. சில சமயங்களில் சைக்கிள் கட்டி கொண்டு திருட்டிதனமாக ரெக்கார்ட் டேன்ஸ் பார்த்ததுண்டு... கரகாட்ட தேவதைகளை தொடர்ந்து கொண்டு அடுத்த ஊர் வரைக்கும் போனதுண்டு... இன்றும் ஊர் பக்கம் போகும்போது அந்த கடலை காடும், காட்டு தேவதை கோவில் மண்டபங்களும் அன்று நடந்த ஜால்ரா சலங்கை சத்தங்களை நினைவூட்டுவதுண்டு...

No comments: