அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Sunday, October 08, 2006

பெளர்ணமி பூஜை

இந்த முறை கோவை வரும்போதே வீட்டில் ஏற்பாடு செய்துவிட்டார்கள். அதனால் குலதெய்வம் கோவில் பிரயாணம் வழக்கத்தை விட திருப்தியாக இருந்தது. பெளர்ணமியும் வெள்ளிகிழமையில் அமைத்து விட்டது. இரவு பெளர்ணமி பூஜை விசேஷம். அபிஷேகம், ஆராதனை, படையல், பொங்கல், பஞ்சாமிர்த்தம், அவல் என திருப்தியான பூஜை. பல்லடத்தில் இருந்து உள்ளே உள்ள கிராமம் அது. எங்கள் குலதெய்வம் - அங்காளம்மன். காட்டு பெண் தெய்வம். கிராமத்தில் மொபைல் போன் டவர் எல்லாம் எடுக்காது (நிம்மதி). நல்ல காற்று. திருப்பூரில் பணம் படைத்தவர்கள் இங்கே காற்றாலையில் முதலீடு செய்திருக்கிறார்களாம். அரச மரத்தடி பிள்ளையார் அருகில் உட்கார்ந்து காற்றை அனுபவிக்கும் சுகம் அலாதி. கோவில் கிணற்றில் கல்கண்டு தண்ணீர். நல்ல ஓடு வேய்ந்த மண்டபம். 250 பேர் நிற்க்க கூடிய கோவில் வளாகம். ஒற்றை கோபுரமும்..ஒரு காவல்
தெய்வமும் கொண்ட பெண் தெய்வம். ஒரு இனம் புரியாத திருப்தி இந்த கோவிலுக்கு வரும்போது எனக்கு ஏற்படுவதை உணர்கிறேன். என் திருமணத்தை இந்த கோவிலில்தான் வைத்து கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு அம்மா மகிழ்ச்சியோடு சம்மத்தித்து இருக்கிறார். பெண்தான் யார் என்று தெரியவேண்டும்... நமக்கு செவ்வாய் தோஷம் உண்டென்பது ஜாதக கருத்து... அதுவும் தவிர வீட்டில் போய் பெண்பார்பதற்க்கு நான் அனுமதிப்பதில்லை. பெண் பார்த்தல் ஏதாவது கோவிலில் நடப்பது நல்லது - அதற்க்கு நிறைய தார்மீக காரணங்கள் உண்டு - எந்த விதத்திலும் மூட நம்பிக்கைகள் காரணம் கிடையாது. இன்னும் ஒரு வருடம் - அதற்க்கும் நானே பெண்ணை சொல்லிவிட வேண்டும் அல்லது அவர்கள் சொல்லும் பெண்னை ஒத்து கொள்ள வேண்டும்... எப்படி இருப்பினும் எனக்கு சம்மதமே... திருமணம் மட்டும் கிராம கோவிலில் சொந்த பந்தம் எல்லாம் அழைத்து பந்தி போட்டு பரிமாறி கொண்டாட்டமாக நடக்க வேண்டும்... கிராமத்து கிழவிகளின் ஆசீர்வாதமும், குறும்பு பேச்சோடு கூடிய சொந்தங்களும், விடலைகளும் கூடி வாழ்த்திதான் திருமணம் என்பது என் கனவு...பார்க்கலாம்..

No comments: