அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Sunday, October 08, 2006

வியாபார மேடைகள்...

வியாழக்கிழமைகளில் எங்கள் ஊரில் சந்தை இருக்கும். கொஞ்சமேனும் பணத்தை பற்றி அறிந்து கொண்டது அங்கேதான். பாட்டிதான் எல்லா பெருமைகளுக்கும் சொந்தகாரர். சந்தைக்குள் நுழையும்போதே இனிப்பு பாகில் செய்யபட்ட தேர் பொம்மைகள் இருக்கும் - மஞ்சள் மற்றும் சிவப்பில். அப்புறம் ஜவ்வு மிட்டாய் - வாட்ச் கட்டி விடுவார்கள். மளிகை பொருள்களின் வாசனை கவிய குறுக்கும் நெடுக்குமாக சின்ன சின்ன கடைகள்.
சல்லிசான காய்கனி வகைகள்.. கூறு கட்டி விற்பார்கள். பலாப்பழம்..வாழை.. மற்றும் மாம்பழம். சந்தைக்கு கொஞ்சம் வெளியே கருவாடும், உப்பு கண்டமும், கறியும். சந்தைக்கு போய்வருவது ஒரு வகையில் வாரத்திருவிழா. அடுத்த நாள் இதே கூட்டம் சினிமா கொட்டகையில் விசிலடித்து கொண்டு இருக்கும். இரண்டாவது ஆட்டம் முடிந்து வரும்போது சந்தை மேடையில் ஊர் காவல் படை இளைஞர்கள் இருப்பார்கள்...சில முறை
சந்தையில் அபூர்வமாக பொம்மலாட்டம் பார்த்ததுண்டு. பெரும்பாலும் மகாபாரத கதைகள். பேருந்துகள் இருந்தாலும் வண்டி கட்டி கொண்டு பக்கத்து கிராமங்கலில் இருந்து வியாபாரிகளும் மக்களும் வருவதுண்டு.. யாரும் இல்லாத மற்ற நாட்களில் மதிய நேரங்களில் சந்தை ஒரு புழுதி படர்ந்த மைதானம்.. கொஞ்சம் மேடைகளும்.. கொஞ்சம் ஆடுகளும்... நிழலில் தூங்கும் கிழவர்களையும் தவிர... அங்கே யாரும் இருந்ததில்லை...

No comments: