அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Sunday, May 28, 2006

இரவு பயணங்கள்..

இரவில் பயணங்கள் ரம்மியமானவை. அதுவும் இரவு பேருந்து பயணங்கள்..தொடர்ச்சியான பயணமாக இல்லாமல் சிறு இடைவெளிகளை கொண்ட பயணங்களை நான் அதிகம் விரும்புவதுண்டு. பின் இரவின் மடியில் மெல்லிய ரேடியோ இசையோடு, மங்கிய குழல் விளக்குகள் கவிய, புகை படிந்து காய்ந்து கொண்டு இருக்கும் உணவு விடுதிகள்..தூக்க கலக்கத்தோடு வியாபாரத்தில் இருக்கும் மனிதர்கள்..அது ஒரு வேறு வகையான உலகம். பயணிகளை விட நான் ஓட்டுனர்களையும், நடத்துனர்களையும் அவர்களோடு பயணத்தில் உள்ள மனிதர்களிடன் உள்ள உறவுகளை கவனிப்பதில் ஆர்வம் கொண்டதுண்டு. பல ஓட்டுனர்களுக்கு நடத்துனர்களுக்கு உணவு விடுதி வேலையாட்களுக்கும் விசித்திரமான நட்பு இருப்பதுண்டு. நீங்கள் ஓட்டுனருடனோ, நடத்டுனருடனோ நெருக்கமாக இருந்தால் உங்களுக்கும் ஸ்பெஷல் கவனிப்பு கிடைக்கும். இரவு பேருந்துகளின் பாடல்கள் சுகமானவை.. அப்படிபட்ட தொகுப்புகளை அவர்களே பெரும்பாலும் உருவாக்குகிறார்கள். இரவு கவிந்தபிறகு பயணம் சார்ந்த உலகம் அலாதியானது. அது பகல் பயணத்தில் பெரும்பாலும் கிடைப்பதில்லை. இரவு உணவு விடுதிகள்..இரவு தங்கும் விடுதிகள்..பேருந்து நிலையங்கள்.. மனிதர்கள்.. நடு இரவில் தேநீர்.. பாடல்கள்... நெடுந்தொலைவு பேருந்துகளை போலவே, குறைந்த தூர பயணங்களும் இரவில் மேற்கொண்டு உள்ளேன். சில பயணங்களில் இயற்கையும் சேர்ந்து கொள்ளும்.. முக்கியமாக மழை. மழை நேர இரவு பயணங்கள் பயணங்களின் போக்கையே மாற்றி விடுவதுண்டு. என் பயணங்களில் சில வித்தியாசமான பயணிகளை பார்த்திருக்கிறேன்..ஆண்கள் பெரும்பாலும் நிறைய பேசும் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள்..அரசியல் பொருளாதாரம் உறவுகள்..எல்லாம் பேசுவார்கள்.. நான் ரசித்து வந்து இருக்கிறேன்.. குறிப்பாக பெண்கள்.. அந்த பயணத்துக்கு பிறகு அவர்களை மறுபடி சந்தித்து இருப்பது அபூர்வம்..எனினும் சில பெண்கள் மனதை விட்டு அகலாதவர்கள்.. அந்த கண்கள்.. அந்த புன்னகை.. சில பார்வைகள்.. என்றும் மறக்க முடியாதவை.. இன்றும் என் பயணத்தில் இடம் கொண்ட எந்த ஊரை தாண்டி போனாலும்.. என் கண்கள் என்னையும் அறியாமல் தேடுகின்றன..மனம் கொண்ட இடங்களை போலவே.. மனம் கொண்ட மனிதர்களையும்.. இன்னும் சொல்ல நிறைய உண்டு.. வரும் காலங்களில் பகிர்ந்து கொள்வோம்..

No comments: