அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Sunday, May 07, 2006

தண்டு மாரியம்மன் திருவிழா

இந்த முறை கோவைக்கு சென்றிருந்த போது தண்டு மாரியம்மன் திருவிழா நடந்து கொண்டிருந்தது...மாலை மெல்ல ஒரு நடை சென்றோம்.. நல்ல அலங்காரம்..நல்ல கூட்டம்.. கோவை பெண்களின் உடையலங்கார மாறுதல்களை ரசித்து கொண்டே ( சைட் அடிப்பதற்க்கு இன்னோரு பெயர்...) கோவில் சுத்தி வந்தோம்.. ரோட்டை மறித்து பந்தல் போட்டிருந்தார்கள்... ஆர்கெஸ்டிரா என்று ஒரு சமாச்சாரம்.. கொஞ்சம் நின்று பார்ப்போம் என்று ஒரு பழரசம் வாங்கி கொண்டு கவனித்தோம்...அருகில் ஒரு நடுத்தர வயதுக்காரர்...முதலில் புன்னகைத்தார்...பதிலுக்கு புன்னகைத்தது தப்பாக போனது... மனிதர் ஆரம்பித்து விட்டார்..."தம்பி ... நான் இந்த கோவிலுக்கு எத்தனை செய்ஞ்சுருகேன்...அந்த காலத்திலே..." என்று.. "இந்த காலத்து பொண்ணுகளுக்கு துணி போடவே கஷ்டமா இருக்கு போல தம்பி.. என்ன துணி இது...சகிக்கில " புலம்பல் வேறு.. பிடிச்சா பாரு.. பிடிக்கலேனா மறைக்காம நகர்ந்து போலாம்ல.. என்று சொல்ல முடியவில்லை.. முந்தய ஆச்சார உடை அலங்காரங்கள் மறைந்து கொஞ்சம் கவர்ச்சி இருந்தது மறுக்க முடியாது எனினும்..இன்றைய காலங்களில் இது எல்லாம் பேச முடியாது.. எனினும் அவர் புலம்பலையும் பேச்சையும் ஒரு கூட்டம் நின்று ஆமோதித்து கொண்டு இருந்தது... எல்லாரும் 40 வயதை தாண்டியவர்கள்... கடவுள்,பக்தி, கற்பு...என்றெல்லாம் பேச்சு வளர...என் கையில் இருந்த பழரசமும் தீர்ந்து போகும் நேரத்தில் நல்ல நேரம்...கச்சேரி ஆரம்பமானது.. ஆரம்பத்தில் ஒரு கடவுள் பாட்டு.. அப்புறம் ஒரு கடவுள் பாட்டு... அப்புறம்.. " தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா... " என்று ஒரு பெண் அபஸ்வரமாய் பாட ஆரம்பிக்க... இந்த பாட்டுக்கு அர்த்தம் என்ன..? கோவில் திருவிழாவில் இது சரியா என்ற உள் கேள்விகளோடு திரும்பி பார்த்தால்.. அந்த மானஸ்தர்கள் யாரையும் காணோம்...எல்லாம் ஆர்கஸ்டிரவின் முதன் வரிசையில் உட்கார்ந்திருந்தார்கள்...

No comments: