அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Sunday, May 07, 2006

சந்தைக்கு வந்த கிளி...

ஒரு முறை துடியலூர் சந்தைவழியாக பெரியநாயக்கன் பாளையம் செல்ல வேண்டியிருந்தது.. நண்பர் வீட்டில் மனைவி ஊருக்கு போயிருந்ததால்...சொந்த சமையல்...துணைக்கு நாங்களும்..போகும் வழியில் சந்தையில் காய்கறி வாங்கிகொள்ள திட்டம்.. நல்ல கூட்டம் அன்று. காரை வெளியிலேயே நிறுத்திவிட்டு.. உள்ளே நுழைந்தோம்... அற்புதமான சந்தை...கொஞ்சமே விலையில் நல்ல காய்கறிகள் மற்றும் பலசரக்கு பொருள்கள்.. இப்படி எல்லா கிராம விளைச்சலும் சரியான முறையில் இடை தரகர்கள் இல்லாமல் வியாபரம் ஆனால்...இலவச பொருள்களில் அரசியல் நடத்தும் முதலைகளை துரத்திவிடலாம்..

சந்தையில் ஓரம் ஒருவர் கிளி கூண்டு வைத்து உட்கார்ந்து இருந்தார்...வயதானவர்...வெள்ளை வேட்டி சட்டையில்...தலையில் முண்டாசு...அடர்த்தியான வெள்ளை மீசை..பட்டை சந்தனம் என்று நல்ல விளம்பரம்... ஒரு சிறிய அட்டையில்... "கிளி ஜோஸ்யம்... 2 ரூபாய்... " என்று இருந்தது.. கூட வந்த நண்பர் அங்கேயே நின்று விட்டார்.. சரி அவருக்காக பார்க்கலாம் என்று போனால்...கிழவர் பேச்சு பிரமாதம்.. பயங்கர வரவேற்ப்பு... எங்களை காட்டி கூட்டம் வேறு சேர்த்துவிட்டார்.. எங்களை சுற்றி 10 - 15 பேர் கூடிவிட்டார்கள்..கிளிக்கு பேர் ஐஸ்வர்யா...!!! அது வெளியே வந்து ஒரு வித வன்மத்துடன் எங்களை பார்த்தது.. 4- 5 சீட்டுகளை கலைத்தது.. பிறகு ரொம்ப பெருமையாக ஒரு சீட்டைஎடுத்து கொடுத்துவிட்டு.. கிழவர் கையில் இருந்து 2 நெல்லு மணிகளை கொத்தி கொண்டு அசுவரஸ்யமாக நடந்து கூண்டுக்குள் போய் உட்கார்ந்து கொண்டது.. நண்பருக்கு வந்திருந்தது வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் படம்... கிழவர் பாட்டெல்லாம் படிக்க ஆரம்பித்து விட்டார்.. "தம்பி உனக்கு ரெண்டு மனைவி.. " என்று வேறு பாட்டெல்லாம் பாடம் கூட்டம் மெல்ல சிரிக்க ஆரம்பித்து விட்டது.. எங்களுக்கு கொஞ்சம் தர்மசங்கடம்.. அவசர அவசரமாக கையில் கிடைத்த சில்லரையை அவருக்கு கொடுத்துவிட்டு.. காருக்கு ஓடி வந்தோம்..

சில நேரங்களில் இந்தகைய ஜோசியர்களிடன் ஏற்படும் அனுபவம் நல்ல ரசனைக்குரிய விஷயமாக இருக்கும்...சில நேரங்களில் எரிச்சலும் வருவதுண்டு.. எனினும் அந்த கிழவரின் விஷயங்களை சொல்லும் முறையிம், வார்த்தை பிரயோகங்களும் அற்புதமாக இருந்ததை மறுக்க முடியாது...

சில வருடங்களுக்கு பின்னர் அந்த நண்பரை பார்த்த போது... பம்பாயில் இன்னொரு பெண்ணுடன் சமீபகாலத்தில் தொடர்பு ஏற்பட்டு தற்போது இரு மனைவியருடன் வாழ்வதாக சொன்னார்... அது அவருக்காக சொல்லபட்ட ஜோஸ்யமா...இல்லை ஜோஸ்யர் சொன்னதுக்காக அவர் வாழ்ந்து கொண்டு இருக்கிறாரா...புரியவில்லை..

No comments: