அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Sunday, May 14, 2006

குழந்தையும் கொஞ்சம் தெய்வமும்...

என் அலுவகத்துக்கு அருகில் இருக்கும் தேநீர்கடையில் சில மாலை நேரங்களில் நின்று கொண்டு இருக்கும் போது வயதான பெண்மணிகள் சிலரை காண்பதுண்டு... பெரும்பாலும் உயர் மத்தியதர வகுப்பை சார்ந்தவர்கள்.. மெதுவாக தங்களுக்கு பேசி கொண்டு நடந்து செல்லும் சுய பயணிகள்.. சில நேரங்களில் 2 அல்லது 3 பெண்கள் குழுவாக பேசிகொண்டு நடந்து செல்வதுண்டு. தோளில் தொங்கும் பையுடன் பள்ளிகூட ரகசியங்களை பேசி சிரித்து கொண்டு ஓடும் சின்ன குழந்தைகளில் குதூகலங்களை அந்த குழு அரட்டையில் கவனித்து இருக்கிறேன். சில நேரங்களில் ஒரு பெண்ணை மற்றவர்கள் ஏதோ சமாதானம் செய்து கொண்டு இருப்பார்கள். சில பெண்கள் கையில் குழந்தையுடன் வருவதுண்டு... மற்ற வயதான பெண்களுக்கு அந்த குழந்தையுடன் இருக்கும் வினாடிகள் சுக காலங்கள்.. குழந்தைக்கு பேசதெரியாது.. சைகையும் சத்தமுமாய் அது பேரிளம் குழந்தைகளுடன் கதை பேசி கொண்டு இருக்கும்... சில பெண்கள் கையில் இருக்கும் குழந்தையுடன் வெகு சுவரஸ்யமாக பேசி கொண்டு நடப்பதையும் பார்க்கிறேன்.. குழந்தை வாயில் விரலும் பொருந்தாத அமைதியுடன் பெண்ணின் பேச்சை கவனித்து கொண்டு இருக்கும்... பொதுவில் பெண்கள் அவர்களில் பேச்சை யாராவது கவனிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். வயதான பெண்களுக்கு அது நிறைய உண்டு. பேச்சை கவனித்தல் ஒரு வகை அங்கீகாரம்..ஒரு வகை விருந்தோம்பல்..ஒரு வகை நெருக்கத்தை அது உண்டு செய்கிறது. பிராத்தனைகளும் அது போலவே.. ஆண்களின் பிராத்தனைகளை விட பெண்களின் பிராத்தனைகளுக்கு வலுவுண்டு.. அது மனோரீதியான எண்ண அலைகளை பெரும்பான்மைபடுத்துகிறது. கடவுளும் குழந்தையும் சில நேரங்களில் இந்த பெண்களுக்கு ஒரே அலைவரியில் ஒன்று படுகிறார்கள். காற்றில் இலைகள் உதிர்ந்து கொண்டு இருந்தாலும் ... புதிய இலைகள் சுவாசிக்க மறப்பதில்லை..

No comments: