அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Sunday, May 07, 2006

தீராநதி கவர்ந்தவை

ரமேஷ் - பிரேமின் 'கூத்தாண்டவன்' சிறுகதை... - தற்கொலைக்கு முயலும் ஒரு ஆணின் வாழ்க்கையும், அவன் நண்பனுடன் அவன் கொள்ளும் உறவுகளும், அவன் தாயின் கற்பினை கொள்ளை கொள்ளும் சந்தர்ப்பவாத சூழல்களும், கூத்தாண்டவர் கோவிலுக்கு வேஷம் கட்டி கொண்டு போகும் அவன் தந்தையின் கதையும்.. தன்னை ஒரு இருபாலின உறவு சேர்க்கையாளனாக அவன் உணர்வதும், சமூகத்துக்கு அவன் பார்வையும்...மெல்லிய தான் சார்ந்த உறவுகளின் மேல் கொள்ளும் பொறாமையும் என கதை ஒரு தற்கொலைக்கு உண்டான சூழல்களை சொல்லி போகிறது... தமிழில் இது போன்ற கதைகள் அதிகம் கிடையாது என்று நினைக்கிறேன்.. ரமேஷ் - பிரேமின் சில கதைகளை படித்து இருக்கிறேன்... அதீதமான கற்பனை சவாரிகளும் காமமும் கலந்தவை அவர்...மனித மனங்களின் இருளில் படிந்து உள்ள உதிர்ந்த சுவர்களை போல...

சுகிர்தராணியின் செந்நிறம், மீட்சி மற்றும் ஆயுதம் கவிதைகள்...

கூகை என்ற புத்தக விமர்ச்சனம்... - தலித் இலக்கியத்தில் ஒரு வித்தியாசமான கதை என்று சொல்லபடுகிறது...

எஸ். ராமகிருஷ்ணன் - எழுதியிருக்கும் தென் அமெரிக்க திரைப்படங்களை பற்றிய பார்வைகள்... க்ளோபர் ரோச்சா, வால்டர் செலஸ், கார்லோ கமுராட்டி ஆகியோரின் திரைப்படங்கள் அலசபட்டு உள்ளன.. முக்கியமாக சே-குவாராவின் மறுபக்கத்தை காட்டும் 'மோட்டார் சைக்கிள் டயரீஸ்'.

லீனா மணிமேகலையின் ரகசிய உறவுகள் பற்றி ஒரு கவிதை..மெல்லிய காமம் சொன்னாலும் கவிதையின் அர்த்தம் உள் இறங்குகிறது.

No comments: