அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Sunday, May 07, 2006

ரயிலே ரயிலே ஒரு நிமிஷம்.

சென்ற திங்கள் கிழமை காலை 6 மணி. மொபைல் போனில் அலாரம் அடித்ததும் திடுக்கிட்டு கண் விழித்து சைட்பர்த்திலிருந்து குதித்து இறங்கி கண்ணை கசக்கி கொண்டு ரயிலின் கதவுக்கு வந்தால்...ரயில் நகரவே இல்லை. இன்னும் சிலர் கதவோரம் நின்று கொண்டு இருந்தார்கள்.. "எங்க சார் இருக்கோம்..."என் கேள்விக்கு நக்கலாக பதில் வந்தது... "அத கண்டுபிடிக்கத்தான் நாங்களும் பார்க்கறோம்.." கொஞ்சம் தெலுங்கு வாசம்..பதில் சொன்ன ஆசாமி கொஞ்சம் ஆஜானுபாவமாக இருந்ததால் மேற்கொண்டு பேசும் எண்ணத்தை கைவிட்டேன். பின்னர் மெல்ல ரயில் நகர்ந்து ஒரு ரயில்வே கேட் முன்னால் நின்றது.. வெளியே இருந்த பெயர் பலகை 'சாம்பல்பட்டி' என்றது. இந்த ஊர் எங்கே இருக்கிறது...??? பக்கத்தில் ஒரு பெரியவர் சொன்னார்.. ஜோலார் பேட்டைக்கு முன்னால்... ரயில் ஏன் நகரவில்லை.. பதில் இல்லை.. டி.டி.ஆர்.. ஆளே காணவில்லை.. மணி 8 ஆகும் வரைக்கு அங்கேயே இருந்த ரயில் மெல்ல மெல்ல நகர... பசி வயிற்றை பிறண்ட ஆரம்பித்துவிட்டது.. 1:25ரூபாய்க்கு கூட விலை பெறாத 4 இட்டிலிகள் 20 ரூபாய்க்கு வாங்கினோம்...எல்லாம் ரோட்டோர திடீர் வியாபார்கள் கைவண்ணம்..ரயில் நிற்பதையும், மக்கள் பசி முகங்களையும் பார்த்தவர்களின் வியாபார நோக்கம்...20 ரூபாய் அதிகம் என்று யாரும் பேரம் பேசவில்லை.. மாறாக ரயிலில் அதிகம் பேர் வாங்கினார்கள்..கை கழுவும் போது என்னுடன் நின்ற ஒருவர் சொன்னார்..."விலை அதிகம் என்றாலும் நாம் வாங்குவோம் என்று அவர்களுக்கு தெரியும்...நாம் நிறைய சம்பாரிப்பவர்கள் என்பது அவர்களின் கருத்து..தவறில்லை...ஆனால் இந்த சம்பாதனைக்கு ஆரம்பகாலத்தில் இருந்தே படிப்பு, லஞ்சம், சுய தேவைகளின் பலி என நாம் இழந்திருப்பதையும் அவர்கள் கணக்கில் கொள்ள வேண்டும்..." ரயில் அன்று முழுவதும் மெல்ல மெல்ல நகர்ந்து ஜோலார்பேட்டைக்கும் அரக்கோணத்துக்கும் இடையே உள்ள தூரத்தை 12 மணி நேரத்தில் கடந்தது.

நல்ல வெயில். சரியான உணவு வசதிகள் கிடையாது. இரவு ரயில் ஆகையால் உணவு சமைக்கும் பெட்டியும் ரயிலில் இல்லை. யாரும் உணவு பொருள்களும் கொண்டு வரவில்லை. தண்ணீரும் கிடையாது.. எல்லா ரயில் நிலையங்களிலும் மே முதல் தேதிக்காக "உழைப்பாளர் தின" விடுமுறை.. சுகாதாரமில்லாத கிராம ரயில்நிலைய தண்ணீரை குடிக்க விருப்பம் இல்லாதவர்கள் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலில் இருந்து சிப் சிப்பாக தண்ணீர் குடித்து கொண்டு இருந்தார்கள்..10 ரூபாய் பிஸ்கட் பாக்கெட் 25 ரூபாய்.. பழங்கள் கிடையாது. ஏ.சி. பெட்டியில் காற்று வசதியும் இல்லாததால் எல்லாரும் வெளியேதான் நின்று கொண்டு இருந்தோம்.. என்னுடன் ஒரு ஆங்கிலேய பெண் பயணம் செய்தால்..கடந்த 3 மாதங்களாக தமிழகத்தில் சுற்றுபயணம் செய்து கொண்டு இருக்கிறாள். அரைமணிக்கு ஒரு சிகரெட்..கொஞ்சம் தண்ணீர்..வேறு எதுவும் சாப்பிடவில்லை...முதலில் புன்னகையில் ஆரம்பித்த நட்பு மெல்ல பேச்சில் நின்றது. ஒரு அந்துவான காட்டில் ரயில் நின்ற போது நானும் அவளும் அருகில் தெரிந்த நீர் தேங்கியுந்த நீர் நிலைக்கு நடந்தோம். வெயிலில் தண்ணீரின் மேல் பகுதி சூடாக இருந்தாலும் கலைத்து விட்ட பின்னர் தண்ணீர் குளுமையாக இருந்தது.. குடிக்க முடியாது எனினும் முகம் கழுவ முடியும்...நிறைய பேசினாள்...கொஞ்சம் கோவமும் அவள் பேச்சில் இருந்தது..இத்தகைய சூழலில் தண்ணீரும் உணவும் கூட ஏற்பாடு செய்ய முடியாத ரயில்வே டிபார்மெண்டை அவள் திட்டிய போது எனக்கும் பதில் இல்லை.. கொஞ்சம் கொஞ்சமாக என் பகுதியில் இந்த சிலர் நட்பாகிவிட்டோம்...சுருதி என்று ஒரு குட்டி பெண்..பயங்கர குறும்பு... பயங்கர சத்தம்... வயதான சிலர்...பழங்கால கதைகள்...பசி மறக்க வேண்டுமே.. !! அரக்கோணத்தில் ஒரு சரக்கு ரயில் தடம் புரண்டதால் கால தாமதம் ஆகிறது என்றார்கள்..ஒரு வழியாக ரயில் ஊர்ந்து சென்னை சென்ரலில் நுழைய எல்லாரும் அவரவர் பெட்டிகளை தயார் செய்தோம்.. அந்த ஆங்கிலேயெ பெண் ரயில் கொடுக்கபட்டிருந்த போர்வைகளையும் தலையணைகளையும் ஒழுங்கு படுத்தி கொண்டிருந்தாள்...

No comments: