அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Saturday, November 12, 2005

காதல்

காதல் எப்போதெல்லாம் வருகிறது. பொதுவாக ஆண் பெண் நட்பில் எந்த நிமிடமும் காதல் உருவாகிறது. அது பெரும்பாலும் வெளிப்படுத்தபடுவதில்லை. சந்தர்பங்களும் சூழ்நிலைகளும் காரணமாகிறது. காதல் உருவாவதின் காரணங்களை போலவே, வெளிப்படுத்தபடாமல் இருப்பதற்கும் காரணம் பட்டம் கொள்கின்றன. என் அளவில், என் வட்டத்திலும், நட்பு வட்டத்திலும் காதல் இங்கனம் உள்நிலையில் தேங்கியிருக்கிறது. சில பெண்களிடம் நான் சொன்னதில்லை எனினும் என் நடவடிக்கைகளை கொண்டு அவள் புரிந்து கொண்டிருக்கலாம். முதல்காதல் போலல்ல தற்போதைய காதல் எல்லாம். முதல் காதலில் முழு ஈடுபாடு இருந்தாலும் காரண அடிப்படையில் இனகவர்ச்சி முன் நின்றது. அழகு என்பது முதன்மைபடுத்தபட்டது. வளர்தலின் சாட்சியாக, காதலில் மெல்ல மெல்ல அழகு தனிமைபட்டும், மனது முதன்மைபட்டும் நின்கிறது. எனினும் உடல்கவர்ச்சி இல்லாத காதல் விவாதம் கொள்ளப்படும் கருத்து. நட்பு காதலாய் உடையும் கணம் அற்புதமானது. ஒரு புன்னகையில், ஒரு தொலைபேசி விவாதத்தில், ஒரு மழைக்கால காலையில், ஒரு மாலைநேர நடத்தலில், ஒரு திரைப்பட காட்சியில், ஒரு சம்மதித்தலில், ஒரு பரிசில், ஒரு முத்ததிலும் கூட... சில நேரங்களில் பிரிவிலும். ஆண்கள் பெண்களாலும் பெண்கள் ஆண்களாலும் வையம் முழுவதும் ஈர்க்கபட்டுகொண்டே இருக்கிறார்கள். இதில் கணக்கு வைப்பது அநாகரீகம். காதல் இல்லாத ஒரு மையபுள்ளியில் வைக்கபடும் உறவுகளுக்குள் பெரும்பாலும் பிணைப்பு இருப்பதில்லை என்பது என் கருத்து. எனக்கு பிடித்தது அவளுக்கும் பிடித்திருக்குமாயின், அவளின் ஈர்ப்புகளின் என் கவனமும் இருக்குமாயின் நெருக்கத்தில் விளையும் நட்பு மெல்ல காதலாகி பின்னர் யாரும் சொல்லாமலேயே நினைவுகளாக வாழ்வின் எல்லாம் பக்கங்களிலும் எழுதபடுகிறது.

1 comment:

Anonymous said...

ethanai peyar ungaLin karuthukku othu povargaL endru ninaikkireergal? eninum, miga dhairiyamana karuthu. vaazthukkaL.