அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Monday, November 21, 2005

செய்திகளும் சில கருத்துகளும்

நவம்பர் 17 தினமலர் நாளிதழை புரட்டிகொண்டிருக்கும்போது சில செய்திகளை பற்றி தோன்றிய கருத்துகள் இவை.. இதற்க்காக யாரும் திருநெல்வேலிதாண்டி குக்கிராமத்தில் என் மேல் வழக்கு பதிவு செய்யமாட்டார்கள் என நம்புகிறேன்..

குஷ்புவுக்கு ஆதரவு தெரிவிக்கும் சானியா, நடாலியா கிளினோபோவா, மற்றும் நரேன் கார்த்திகேயன்.
-- எனக்கு தெரிந்து இன்றைய சம்பாரிக்கும் இளைய சமுதாயம் மொத்தமுமே ஆதரவு தெரிவித்துகொண்டுதான் இருக்கிறது ஆனால் வெளிப்படையாக தெரிவிக்கும் தைரியம் இல்லாமல். நடுத்தர வயது, வாலிப வயோதிக அன்பர்களுக்கும் ஆதரவு தெரிவிக்க ஆசைதான், ஆனால் இதுவரை என்வென்றே தெரியாத கலாச்சாரமும், மனைவி பயமும், ஆதரவுக்கு முட்டுகட்டைபோடுகின்றன. கிட்டதட்ட 10 ஆண்டுகளில் செக்ஸ் சமுதாயத்தில் குறிப்பாக சம்பாரிக்கும் சமுதாயத்தில் மிக சகஜமான அங்கமாகிவிட்டது. பாதுகாப்பான உடலுறவு என்பதில் ஒரு நடிகை தெரிவித்த கருத்து சரிதான் என்பதில் பலருக்கும் கருத்து இருந்தாலும், தமிழ் கலாச்சாரம் என்ற ஒரு தடையை தாண்டுவதில் திணறல் இருக்கிறது. இதில் 90 சதவீதம் பேருக்கு தமிழ் கலாச்சாரம் என்றால் என்னவென்றே தெரியாது. இதே சமுதாயம் சினிமாவில் உடல் சார்ந்த கவர்ச்சி இல்லாவிட்டால் சினிமா பார்க்காது, முறையற்ற உறவுகளை சொல்லாத நாடகம் பார்க்காது. இன்டெர்நெட்டில் செக்ஸ் தேடாது, குமுதத்திலும் விகடனிலும் தொப்புள் தேடாது, இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிசம் என்ற பெயரில் நடக்கும் காம கூத்துகளை தேடிபடிக்காது, நாலு சுவற்றுக்குள் மனதில் விகாரம் காட்டாது ஏனென்றால் நாம் தமிழ் சமூகம்...தமிழ்நாட்டில் முறையற்ற உறவுகளும், செக்ஸ் தேடல்களும், பாதுகாபற்ற உடலுறவும், போதையும் இல்லை என்று யாராவது உத்தமர் சொல்ல முடியுமா..? லஞ்சம் போலவே இதுவும் சமுதாயத்தில் கலந்துவிட்ட வஸ்து. அன்னிய சந்தையை அனுபவிக்க நாம் கொடுக்கும் விலை இது எனினும் ஆதிமுதல் இது இல்லை என்ற முட்டாள்தனமான வாதம் வேண்டாம்.

மேலும் சில செய்திகள்...

11 வயது சிறுவனிடம் 29800 பணம் பறித்த பெண் எஸ்.ஐ கைது.
-- இனிமேல் பணத்துக்கு பாதுகாப்பக யாராவது அன்னிய நாட்டு கம்பெனி தொழில்முறை பாதுகாவலர்களை அமர்த்திகொள்ளவேண்டும். இல்லையேல் பணம் கொண்டு போவதற்கு முன்பு பக்கத்து போலிஸ் ஸ்டேசனில் கணிசமாக லஞ்சம் கொடுத்து யாராவது ரவுடியை பாதுகாப்புக்கு வைத்து கொள்ள வேண்டும்...

"படிக்கவே விருப்பம் எனக்கு. திருமணத்துக்கு நச்சரித்தால் காதலியை கொன்றேன்" எம்பிஏ காதலன் வாக்குமூலம்.
-- இது பற்றி இனி மேலும் செய்திகள், கருத்துகணிப்புகள், கட்டுரைகள் எல்லா பத்திரிக்கைகளும் எழுதும். ஆனால் படிப்பு பற்றி முன்னிருத்திய காதலனை வில்லனாக்கிவிடும் பெண் அமைப்புகள்.

No comments: