அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Saturday, November 12, 2005

சென்னையில்...

சென்னைக்கு வந்து சென்ற Oct 21ஆம் தேதியோடு 1 மாதம் முடிந்துவிட்டது. இந்த ஒரு மாதம் ஓரளவில் சென்னையின் வாழ்க்கைமுறைக்கு என்னை பழக்கபடுத்தியுள்ளது. அலுவகம் ஆழ்வார்பேட்டையிலும், தங்கியுள்ள இடம் வடக்கு உஸ்மான் ரோட்டிலும் இருக்க பஸ்ஸும் ஆட்டோவும் கொஞ்சமாய் பழக்கமாகியுள்ளது. உணவு கடைகள், பத்திரிக்கைகள் கிடைக்கும் இடங்கள், Browsing Center, மருந்து கடைகள், ஞாயிறு பொழுதுபோக்கு இடங்கள் ஆகியவையும் கொஞ்சமாய் தெரிந்துள்ளன. எனினும் பெருநகரங்களின் வாழ்க்கைவேகம் இன்னும் பிடிபடவில்லை. கோவை மேலும் நெடுநாட்களுக்கு சொர்க்கமாகவே தோன்றும். நிறைய கூட்டம், நிறைய வெயில், மழை வந்தால் தெருவெல்லாம் மூழ்ங்கி போகும் அவலம், கொஞ்சமும் மரியாதை இல்லாமல் தெனாவெட்டாகவே பேசும் மக்கள் சமூகம், அர்த்தமில்லாத வண்டி ஓட்டும் லாவகம், பேஷன் என்ற சொல்லின் தப்பார்த்தமான உடையலங்காரங்கள், எங்கு போவதாக இருந்தாலும் ஆர்காடு நவாப் அளவுக்கு சொத்து இருந்தால்தான் போகமுடியும் என்பது போல சார்ஜ் கேட்கும் ஆட்டோகாரர்கள் என சென்னை இன்னும் விரிந்து கொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டின் பல பகுதி மக்களும், பெருநகரத்தின் வாழ்க்கைமுறையில் தீப்பெட்டிகுள் அடைபட்ட பொன்வண்டு போல இருந்து கொண்டே இருக்கிறார்கள். சொந்த ஊரின் ஞாபங்களை, என்றேனும் ஒரு நாள் என் ஊருக்கே போய்விட போகிறேன் என்ற எண்ணங்களை சுமந்து கொண்டு இருக்கிறார்கள். இனி தொடர்ச்சியாக எழுத முடியும் என நினைக்கிறேன். மத்திய அரசின் சுலபவிலை கணிப்பொறி திட்டம் மூலமாக 1 மாதத்தில் கணிப்பொறிக்கு குறிவைத்துள்ளேன். இணைய இணைப்பும் கிடைக்கும். Browsing Centerல் unicode அமைத்துள்ளேன். அது Windows 98. எனினும் சில இணைய நண்பர்களின் உதவியால் unicode அமைக்க முடிந்துள்ளது. எழுத நிறைய உள்ளது - காலை நேரங்களை உபயோகபடுத்தலாம். அலுவத்தில் நெருக்கல்கள் ஏற்படாதவரை.

No comments: