அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Saturday, November 12, 2005

தீபாவளி...

தீபாவளி விவகாரமாக விடிந்தது இந்த முறை. அலுவலகத்தில் மூன்று மாதத்துக்கு முன்பு ( நான் வேலைக்கு சேரும் முன்னர்) ஆரம்பித்த ஒரு தொல்லைக்கு யாரும் இல்லாத காரணத்தால் நான் பதில் சொல்ல ஆரம்பிக்க அது முடிவில் காலை சுற்றிய பாம்பாகிவிட்டது. நேரம் 12:40 மேல் ஆகிவிட்டதால் உணவு இல்லை - கிடைத்த ஆப்பத்தை சாப்பிட்டு விட்டு, வீடு தேடி வந்தால், வேலைக்கார அம்மாளின் கைங்கரியத்தில் கதவில் ஆட்டோலாக் சிக்கி கொண்டிருக்க நண்பர்கள் தெருவில் நின்றிருந்தார்கள். தெரிந்த நண்பர்கள் எல்லாரும் தீபாவளிக்கு ஊருக்கு போயிருந்ததால் உதவிக்கு ஆளில்லை. பாண்டிபசார் வரை நடந்தோம். ஓட்டல்களில் இடம் இல்லை என்று சொல்லிவிட்டார்கள் - வெளியூர்காரகளுக்கு ஓட்டல் அறை இரவில் கிடைக்காதாம் - அப்புறம் எதற்கு ஓட்டல் என்று தெரியவில்லை. நேரம் ரொம்ப ஆகிவிட்டதும் ஒரு காரணம் என்றார்கள். அப்புறம் ஒரு சின்ன அறை கிடைத்தது. அத்தகைய அறையை நான் பார்த்தே இல்லை. 'ஏதேதோ' நடக்கும் இடம் போல. அதுக்கு ஆயிரம் கேள்விகள். அலுவக ஐடி கார்டு வாங்கி வைத்து கொண்டார்கள். மூன்று பேர். குப்பையான மெத்தைகள், அழுக்கான அறை. சத்தம் போடும் மின்விசிறி. கைகுட்டையை கண்ணில் கட்டிகொண்டு வலுகட்டாயமாக கண்களை மூடி கொண்டு தூங்க முயற்சி செய்ததிலேயே விடிந்து விட்டது. 8:45 க்கு ஒரு பூட்டு ரிப்பேர்காரனை அள்ளி கொண்டு வந்தால் அவன் ஒரு கம்பியில் 10 தேய்ப்பும், 4 தீக்குச்சிகளும் செலவு செய்து 20 நிமிடத்தில் கதையை முடித்து விட்டான். ஒரு தேனீர் குடித்து விட்டு, 9:30க்கு தலைக்கு எண்ணைவைத்து குளித்து, சென்ற முறை கோவை சென்றிருந்த போது எடுத்த புது துணியை அணிந்து கொண்டு நட்பு வட்டம் எல்லாம் கூப்பிட்டு, வாழ்த்து சொன்னேன். உணவு விடுதிகள் இல்லாததால் மதிய உணவும் சேர்த்து 1 - 1/2 நான் - காளான் மசாலாவில். இரவு - இருக்கவே இருக்கிறது மாகி நூடுல்ஸ். கொஞ்சம் டிவிடி திரைப்படங்கள், கொஞ்சம் தூக்கம், முடிந்தே விட்டது தீபாவளி. நாளைக்கு மறுபடியும் அலுவலகம்... இயந்திர வாழ்க்கை... தீபாவளி சாக்கிலாவது நட்பு வட்டங்களில் ஆழ்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. என்னதான் மின் அஞ்சலும், இணைய வழி வாழ்த்துக்களும் இருந்தாலும், நேரில் வாழ்த்து சொல்லும் சுகம் அலாதி.

No comments: