அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Saturday, November 12, 2005

பிக் பிஷ் ...

பிக் பிஷ் என்று ஒரு திரைப்படம். தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவின் ஆழம் சொல்லும் திரைப்படம். தந்தை மகனுக்கு குழந்தைபருவத்தில் இருந்தே தன்னை பற்றி கற்பனைக்கு தாண்டிய கதைகளோடு வளர்க்கிறார். வாலிபத்தில் மகன் தந்தையின் கதைகளில் உள்ள கற்பனைகளை பற்றி தெரிந்து கொள்கிறான். தந்தையின் எல்லா அனுபவங்களுமே கற்பனைகதைகள் தான் என்ற மனோபாவம் உருவாகிறது. தந்தையின் இறுதிகாலத்தில் அவரின் கற்பனைகளுக்கு உண்மைசம்பவங்களுக்கும் உள்ள பிணைப்பு, மற்றும் அதன் உண்மைகளை உணர்கிறான். சம்பவங்களும் மனிதர்களும் மனதின் ஆழத்தில், கதைகளை மெல்ல மெல்ல உருவாக்குவதை கதை தெளிவுபடுத்துகிறது. இசையும் வசனங்களும் குறிப்பிட வேண்டியவை. திரைக்கதை தேவதை கதைகளின் சாராம்சத்தை கொண்டு இருந்தாலும் காட்சி வரிசை, அமைப்பு மிக இயல்பாக சொல்லப்பட்டு இருக்கிறது. கதாபாத்திரங்கள் இன்னும் ரொம்ப நாளுக்கு மனதில் இருப்பார்கள். கொஞ்சம் யோசிப்பதில் இந்த கதை சொல்லும் மனிதர்கள் நமக்கும் பல சமயங்களில் அறிமுகமாகி இருக்கிறார்கள். பெரும்பாலும் பயணங்களில் - கிராமங்களில் கதைகள் எல்லோருடனும் தோழமையும் உலவுகின்றன. பெரும்பாலும் கதைகளில் கதை சொல்லி ஏதோ ஒருவிதத்தில் பார்வையாளனாக இருக்கிறார் - சில நேரங்களில் கதையின் மையமாக கூட. மனோதத்துவரீதியான விவாதத்தில் பொருந்தும் கருத்து இது. எல்லாருக்கும் கதைகள் இருக்கின்றன. அதில் உணர்வுகள், சம்பவங்கள், சில சமயங்களில் அற்புதமான பொய்கள் எல்லாம் இடம்பெறுகின்றன. மனிதர்களின் மறுபக்கங்கள் சொல்லபடுகின்றன. முற்றிலும் புதிய கதாபாத்திரங்கள் உருவாக்கபடுகிறார்கள் - அவர்கள் கதைசொல்லியின் எண்ண எதிர்பார்ப்புக்கு உட்பட்டே வாழ்கிறார்கள். இன்று கதை சொல்ல இயந்திரங்கள் இருக்கின்றன. மனிதமனதின் கதைகள் யாருக்கும் கிடைப்பதில்லை - கேட்பதற்க்கும் இன்னும் சில காலங்களில் யாரும் இருக்கமாட்டார்கள். கதைகள் நம்மை வேறோர் உலகத்துக்கு கொண்டு செல்லும் அற்புதம் பல நேரங்களில் யாராலும் உணர்ந்துகொள்ளபடுவதில்லை. கவிதைகள் வேறோர் உலகம் - கதைகள் வேறோர் உலகம் ஆயினும் மெல்ல விரியும் மனதின் பரிமாணங்களை உணர்தல் சுகம் - வாழும் கணிப்பொறி நரகம் தாண்டிய ஒரு தேவதை உலகம்... என்னை போலவே யாரும் இருந்தால் - பகிர்தலில் சுகம் உணரலாம்...

1 comment:

Anonymous said...

படத்தை போல குறுகிய வடிவில் ஆழமான விமர்சனம் ... என்னுடையதையும் சற்று பாருங்களேன் :) இப்படிக்கு தங்கள் மேலான கருத்தை வேண்டும் - அருள்

arulmoviereview.blogspot.com/2012/06/blog-post_2144.html