அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Monday, April 28, 2008

நினைவு மறந்த மனிதர்கள்

நினைவு மறந்த மனிதர்களை பார்த்திருக்கிறீர்களா.. பெரும்பாலும் கோவில்கலிலும் சில சாலைஓரங்களிலும் மற்றும் பெறும்பாலான நகர பேருந்து நிலையங்களிலும் கவனிக்கலாம். காலத்தின் ஒரு பகுதி அவர்களுக்கு புலப்படாமலேயே இருக்கிறது - மறந்து இருக்கலாம் அல்லது மறக்கவைக்கபட்டு இருக்கலாம். குடும்பத்தால் விரட்டபட்ட ஜுவன்கள்தான் பெரும்பாலும். பெண்களின் நிலை இன்னும் கொடுமை - அவர்களையும் கர்பமாக்கும் வக்கிரகாரர்களை என்ன சொல்ல... சிலரை நான் ஓரளவு கவனித்து இருக்கிறேன். வயதானவர்கள் பெரும்பாலும் ஏதேனும் முனுமுனுத்து கொண்டே இருப்பார்கள் - சில ஓயாமல் பேசுவார்கள். சிலர் அமைதியாக உட்கார்ந்து வெறித்து பார்த்து கொண்டு இருப்பார்கள். ஏதேனும் பொருக்கி கையில் உள்ள பையில் சேமித்து கொண்டே இருப்பார்கள் சிலர். சிலருக்கு காசு கொடுத்தால் புரியாது - பசி மட்டும்தான் பிரதானம். எது சாப்பிட கொடுத்தாலும் கூட உள்ள ஒரு நாய்க்கும் பங்கு கொடுக்கும் பெரிவர் ஒருவர் இருந்தார் - கோவை 10ஆம் நம்பர் வீதியில் - அவரையும் மனநலம் இல்லாதவர் என்றுதான் சொல்வார்கள். நிர்வாணம் கூட சிலருக்கு சகஜமாக இருக்கும். இவர்கள் நிச்சயம் ஆரம்ப காலத்தில் நன்றாக இருந்திருப்பார்கள். நல்ல வாழ்க்கையில் கூட இருந்திருக்கலாம். எந்த புள்ளில் வாழ்க்கை திசை மாறுகிறது என்பது கேள்வி. தனிமைபடுத்தபடுதல் என்பது பெரும் கொடுமை. சக மனிதர்களிடமிருந்து மட்டுமில்லாமல் - தன் வாழ்க்கையில் இருந்தே தனிமைபடுத்தபடுவது நினைக்கவும் முடியாதது. நினைவு மறந்தவர் எல்லாரும் மனநலம் இல்லாதவர் கிடையாது - சிலர் அப்படி மாறுவதுண்டு. நினைவுகள் மறந்து போனாலும் - புதிய வாழ்வின் விஷயங்களை ஆரோக்கியமாக கிரகிக்க முடிந்தவர் - பெரும் நலம் கொண்டவர். நினைவு மறந்த ஒருவருக்கு மறுபடி நினைவு திரும்பினால் அவரை குடும்பம் ஏற்று கொள்கிறது. ஒரு மனநலம் குன்றியவரை அப்படி ஏற்று கொள்ள தயங்குகிறது - ஒரு வகையாக பயம் காரணமாக இருக்கிறது. நினைவுகள் இல்லாத மனிதர்களை நம்மை சுற்றி கொண்டுள்ளோம்.. ஏதேனும் ஒரு நிலையில்லாத புள்ளியில் அவர்களின் வாழ்க்கை மையம் கொண்டலைகிறது. கடந்து போகும் எல்லா மனிதர்களிடமும் மனபிழறு உண்டு - அதன் சராசரி நிலைமட்டுமே நம்மை கோட்டின் இப்பகுதியில் வைத்திருக்கிறது.

1 comment:

saravdotnet said...

எங்க ஊர்லகூட ஒருத்தர் இருக்காரு. கடந்த 20 வருஷங்கள்ல பள்ளி, கல்லூரி, வேலை, வெளிநாடு-ன்னு என் வாழ்க்கைல பல மாற்றங்கள். ஆனா அவரு இன்னும் அதே அழுக்கு உடை, அழுக்கு தாடியோட இன்னும் அப்டியே இருக்காரு.