அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Monday, April 28, 2008

புகைபிடித்தலில் அரசியலும் பொருளாதாரமும்

புகைபிடித்தலை சினிமாவில் கட்டுபடுத்துவதன் மூலம் நாட்டுமக்களை திருத்தலாம் என நினைக்கும் புத்திசாலிதனம் சரி - அப்புறம் எதற்க்கு புகையிலை பொருள்கள் விற்பனை. அரசாங்கம் விற்பனையை நிறுத்தலாமே. அது இன்னும் வேகமாக திருத்துமே...அந்த விவசாயிகளை என்ன பண்ணலாம்...?? புகையிலை பொருட்கள் நிறுத்துவதால் வரும் பொருளாதார தேக்கத்தை என்ன செய்யலாம்... வேறு ஏதாவது சரிசமமான பயிரிடுதலை சொல்லிதரலாம் - யார் வேலை அது..? இன்னும் மலைகாடுகளில் பெரிய தலைகள் கஞ்சா பயிரிடுகிறார்களே அது யார் பார்ப்பது..? மது அருந்துவது தவறு - நல்ல விஷயம்தான். மதுகடைகளை முழுவதுமாக நிறுத்தலாமே. மாத மாதம் இலக்கு வைத்து மதுக்கடை வசூலை அதிகரிப்பது யார்..! அதனை நிறுத்தினால் மதுக்கடைகளில் வேலை செய்பவர்கள் வேலை இழப்பார்களே - அவர்களுக்கு யார் வேலை தருவது...! அந்த 5 வருட கிராம தன்னிறைவு பணியில் ஈடுபடுத்தினால் செய்வார்களா..!! இதில் புள்ளிவிவர விஷயம் வேறு - போன பொங்கலுக்கு 6 கோடி ரூபாய் விற்பனை.. புதுவருட விற்பனையை விட அதிகம்.. அட அட.. என்ன ஒரு சந்தோஷம்...! சினிமாவில் மது அருந்துதலும் புகைபிடித்தலும்தான் மக்களை கெடுக்கிறது என யோசிக்கும் புத்திசாலிகள் - கொஞ்சமாவது தரையில் நின்று யோச்சித்தல் நலம். அரசின் பொருளாதாரத்தில் ஒரு பங்கு மையமாக கொண்ட புகையிலை மற்றும் மதுவை சமுதாயத்தில் இருந்து ஒழிக்க முற்படுவது - நல்ல விஷயமானாலும் அதற்கான வழிமுறைகள் கண்துடைப்பாகவே இருக்கின்றன.

No comments: