அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Monday, April 28, 2008

இன்னும் உண்டு வேலைகள்

கோவையில் ஆறுமுக்கு என ஒரு இடம் உண்டு. சில வருடங்களுக்கு முன்பெல்லாம் நானும் நண்பர்களும் முன்னிரவு நேரங்களில் அலுவலகம் முடிந்து வரும்போது அந்த இடத்தை தாண்டி வருவோம். அங்கு ஒரு சிறிய தள்ளுவண்டி வடை போண்டா கடை இருந்தது. நாங்கள் அங்கு பெரும்பாலும் சாப்பிடுவது வழக்கம். அங்கு ஒரு சிறு பையன் இருந்தான். வயது 10 இருக்கும் - மணிகண்டன் - பெயர் என்று நினைவு. சரியாக கணக்கு பார்பான் - மிக சரியான உபசரிப்பு உண்டு. தொந்தரவு தரும் குடித்திருக்கும் பெரியவர்கள் அல்லது சண்டியர் பெண்களை அவன் கவனிக்கும் விதம் தனி விதம். கிட்டதட்ட 4 வருடங்கள் கழித்து இந்த முறை அவனை பார்த்த போது நல்ல மாற்றம் - முன்னேற்றம் எனவும் சொல்லலாம். சிறிய க்டை போட்டாகிவிட்டது. வடை போண்டா போட இன்னுமொரு ஆள். கல்லா பார்த்து கொள்ள மணிகண்டன் - 2 பிலாஸ்டிக் டேபிள் 8 சேர் வீதம் ஒரு சிறிய அறை.. சைக்கிள் நிறுத்த சின்ன இடம்.. ஒரு மாதிரி செட்டில் ஆகிவிட்டான். ஆனாலும் பழைய மணிகண்டன் மாறவில்லை - பேசும்விதமும், கஸ்டமர்களை கவனிக்கும் விதமும் மாறவில்லை - கல்லாவில் பணம் எண்ணிபோடும் விதம் மாறினாலும் சாப்பிடுபவர்கள் மேல் கண்வைத்து கணக்கு பார்க்கும் குணம் மாறவில்லை. "அண்ணே செளக்கியமா... !!" என்ற பால்யம் மாறாத - குரல் மாறிய குணம் அவனை இன்னும் அவனாகவே காட்டி கொண்டிருந்தது. உண்மையை சொன்னால் மணிகண்டன் போல உழைக்க ஆயிரம் உண்டு வழிகள். அடிப்படை நேர்மையும் அளவான சேமிப்பும் சரியான உழைப்புமே நல்ல முன்னேற்றத்தின் வழிகள் - கார்பரேட் கம்பெனியில் 5 இலக்க சம்பளம்தான் வாழ்க்கை என கொள்ளும் எத்தனை லட்சம் மனிதர்களிடையே இந்த மாதிரி மணிகண்டனும் வாழ்வில் இருக்கிறான். இன்னும் நிறைய மணிகண்டன்கள் பேக்கரி வைத்திருக்கிறார்கள், ஆட்டோமொலைல் வொர்க்சாப் வைத்திருக்கிறார்கள், காப்பி கடை வைக்கிறார்கள் முடி வெட்டுகிறார்கள் இன்னும் என்னவோ செய்கிறார்கள். மொத்ததில் வாழ்க்கை நடத்துகிறார்கள் - கார்பரேட் ஊழியர்களை விட சந்தோஷமாக. இதில் சில மணிகண்டன்களின் எண்ணம் எதிர்காலத்தில் நிறைய பணமாக இருக்கலாம் - ஆனால் அந்த காகிதங்கள் வாழ்க்கையை பறித்துவிடும் என தெரிந்திருந்தால் ஆசைப்பட மாட்டார்கள்.

No comments: