அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Monday, April 28, 2008

நாய்களின் அரசியல்

நான் வசிக்கும் தெருவில் 4 நாய்கள் இருக்கின்றன. முதலில் 3தான் இருந்தது - புதியது வந்து 1 மாதம் ஆகிறது. அவற்றுக்குள் பொதுவான அரசியல் என சில உண்டு. ஒரு நாயின் வரம்புக்குள் இன்னொரு நாய் வராது. ஒரு நாள் குரைத்தால் மட்டுமே மற்ற நாய்கள் குரைக்க ஆரம்பிக்கும். பெரும்பாலும் பிச்சைகாரர்களை பார்த்து குரைக்கும் - அல்லது போலீஸ்காரர்களை. இரவில் ஒவ்வொரு நாய்க்கும் ஒரு இடம் உண்டு. வெகு அரிதாக புணர்ச்சியில் இருக்கும் போது மற்ற நாய்கள் விலகி நிற்கும். யாரும் அவைகளுக்கு உணவிடுவதில்லை. கிடைத்தை - குப்பை தொட்டியிலும் அருகில் உள்ள கடைகளின் கழிவுகளில் இருந்து உண்டு வாழ்கின்றன. தெருவில் யாராவது பணக்கார நாய்களை கையில் பிடித்து கொண்டு நடப்பார்கள். அந்த நாய்கள் இவைகளை பார்த்து குரைக்கும். இவை பதிலுக்கு குரைக்காமல் விலகி போய்விடும். ரொம்ப வரம்பு மீறினால் - 2 அல்லது 3 நாய்கள் சேர்ந்து பணக்கார நாயை பார்த்து குரைத்து ஒரு வழி செய்துவிடும் - நாயை கூட்டி கொண்டு செல்பவர் பாடுதான் - சண்டையை தவிர்க்க போராட வேண்டி இருக்கும். அடிப்படையில் அவைகளுக்கு கூட யாரிடம் மோதலாம் - எப்போது மோதலாம் என தெரிகிறது. எல்லை கோடுகள் தெரிகிறது. தேவைபடும்போது தன் எல்லைக்குள் வந்து குரைப்பவர்களை கூட்டு சேர்ந்து மோதி துரத்த தெரிகிறது.

No comments: