அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Monday, April 28, 2008

ஆணுறையும் ஜெயில் கைதிகளும்

அரசாங்கம் ஜெயில் கைதிகளுக்கு ஆணுறை வழங்க இருப்பதாகவும் அது நிச்சயம் ஓரின சேர்க்கையை ஊக்குவிப்பதற்காக இல்லை எனவும் அது எயிட்ஸ் பாதுகாப்புக்குதான் எனவும் - சுத்தமாக ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளது. ஒரு வகையில் இது நிச்சயம் பாராட்டபட வேண்டிய விஷயம். உடலுறவு நிச்சயம் இருக்கும் எனவும் - அது ஓரின சேர்க்கையாக தான் இருக்கும் எனவும் (அல்லது இதற்க்காவும் அரசாங்கம் ஏதாவது செய்யுமா..) அரசாங்கம் ஒத்து கொள்கிறது - ஆனாலும் ஆவணமாக இல்லை. சுகாதாரமில்லாத உறவு நோய்பரப்பும் அதனை தடுக்க வேண்டும் என்பது நல்ல எண்ணம். மற்றபடி ஆண்கள் சிறை மட்டுமல்லாது பெண்கள் சிறையும் உண்டு. அங்கும் மனிதர்கள் உண்டு. அங்கும் உணர்வுகள் உண்டு - என்ன செய்யலாம் என பேச யாரும் கிடையாது (பெண் ஓரின சேர்க்கைக்கு காப்பு உறை தேவையில்லை என்பது உண்மை எனினும்)- (இன்னும் சில பேரின் கருத்து - சிறையில் கிடைக்காத வசதிகள் கிடையாது - அரசாங்கம் கோழிகறி கூட கொடுகிறது - இருக்கலாம் - தண்டனை என்பது எல்லா மனித உரிமைகளையும் பறிப்பது அல்ல - தனிமைபடுத்தி குற்றத்தை புரிந்து கொண்டு மனதை திருத்துவது). பொதுவாக ஜெயிலில் ஆண் ஓரின சேர்க்கை பற்றி (அரை மனதாக) மனித உரிமை பேசப்படுகிறது - இந்த வகையில் ஓரின சேர்க்கை குற்றம் அல்ல எனவும் - சுகாதாரமாக இருப்பது நல்லது எனவும் அரசாங்கம் மற்றும் மனித உரிமை அமைப்புகள் சொல்கின்றன. எனினும் பெண் ஓரின சேர்க்கை இன்னமும் ஒரு கவர்ச்சி விஷயமாக இருக்கிறது - அதன் உணர்வுகள் அல்லது தேவைகள் புரிய எந்த அமைப்பும் முழுமையாக கிடையாது - எல்லாரும் முனுமுனுக்கிறார்கள் தவிர செயல்பட யாரும் இல்லை - தனிமனிதர்கள் ஏதும் செய்ய முடியாது. சிறை பெண்களுக்கு உணர்வுகளே இருக்காது என நினைக்கிறார்களா, அல்லது சுகாதாரம் என்பது ஆண்களுக்கு மட்டும்தானா - அல்லது இந்தியாவில் பெண் ஓரின சேர்க்கையே எல்லாம் கிடையாது என்ற கலாச்சார குழப்பமா..!!! பெண்களுக்கான அடிப்படை பாலியல் சுகாதாரம் பற்றி சொல்லிதர யார் உண்டு. யார் கேட்பார்கள்..!!!

No comments: