அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Monday, April 28, 2008

கலர் பனியன் நினைவுகள்

சமீபத்தில் ஒருமுறை ஒரு சாலை சந்திப்பில் சில மாணவர்கள் பள்ளி பெயர் கொண்ட கலர் பனியன்களோடு நடந்து கொண்டிருந்தார்கள். நான் என் பள்ளி நாட்களை நினைத்து பார்த்தேன். கலர் பனியன் கொடுத்து அணி பிரிக்கபட்டது மணி மேல்நிலைபள்ளியில் மட்டும்தான். அதற்க்கு முன்னெல்லாம் வெள்ளை சட்டை காக்கி டவுசரோடு புளுதி பறக்க விளையாட்டும் கொஞ்சம் மீறி போனால் சண்டையும் இருக்கும். ஆறாம் வகுப்பில் மணி மேல்நிலைபள்ளி. நான் கண்ணாடி அணிய ஆரம்பித்திருந்த காலம். சேர, சோழ, பாண்டிய, பல்லவ என 4 அணிகள் உண்டு - முறையே சிவப்பு, நீலம், மஞ்சள் மற்றும் பச்சை பனியன்கள் (போன முறை வீடு மாற்றும்போது ஒரு பனியன் திரும்ப கிடைத்தது). கொஞ்சம் நோஞ்சானாகவும் உயரமாகவும் கண்ணாடி அணிந்தவனாகவும் இருப்பதால் பல்லவா டீமில் ஒப்புக்கு சப்பாணியாக மட்டுமே வாழ்க்கை நகர்ந்தது. விளையாட போகாமல் இருந்ததால் மரத்தடியில் நின்று விளையாட்டு ஆசிரியர்கள் சொல்வதை கவனிக்கவும் நேரம் கிடைக்கும். கபடி, கோ-கோ, வாலிபால் மற்றும் பேஸ்பால் இருந்தது - சில விளையாட்டு நுணுக்கங்களை அவர்கள் சொல்வதில் இருந்து கவனித்து கொண்டு - ஏகலைவன் பாணியில் கற்று கொண்டது போல வட்டாரங்களில் எடுத்து விட உபயோகமாக இருந்தது. குறிப்பாக எதிர்பால் அணியிடம் இருந்து. அதிலும் சில கண்ணாடி தேவதைகள் உண்டு. முதலில் அதிகம் கவனிப்பு இல்லாமல் இருந்தாலும் கொஞ்சம் முயற்சி செய்து நட்பு கொண்டு விட முடிந்தது. அப்புறம் அதன் கலர் விளைவுகள் எல்லாம் இருந்தன... எல்லாம் 2 வருஷம்தான். மறுபடி வேறு பள்ளி - வெள்ளை சட்டை (அழுக்காகும் என கருதினால் உள் பனியனோடு போராடலாம்) - காக்கிடிராயர் என வாழ்க்கை மாறிவிட்டது. அது எல்லாம் விளையாடுபவர்களுக்குதானே. நாம் தான் மரத்தடி சக்கரவர்த்தியாயிற்றே. ஆனால் என்ன - அது வெறும் ஆண்கள் பள்ளி. பின்னர் கல்பாக்கம் வந்த பிறகு - அது வேறுகதை. வேறு தோழர்கள், வேறு மரத்தடிகள் - வேறு வேறு அனுபவங்கள். இன்னும் கலர்பனியன்கள் எல்லாம் நினைவுகளையும் கொடுத்து கொண்டே இருக்கின்றன. நான் என் சிறு வயது பொம்மைகளுக்கு கூட பெயர் வைக்கும் பழக்கம் உள்ளவன். அவைகளுடன் எனக்கு மறக்க முடியாத அனுபவங்கள் உண்டு - அவைகளை வைத்து நான் நிறைய கதைகளை டைரக்ட் செய்து இருக்கிறேன். அந்த பொம்மைகள், இந்த கலர் பனியன்கள், வாழ்க்கை கல்வி வகுப்பறையில் செய்த ஜிகினா பந்து, பிலாஸ்டிக் சட்டத்தில் நெய்யபட்ட புறாக்கள் (முழுக்க முடிக்கவில்லை) - இவை எல்லாவற்றுடன் சில நோட்டு புத்தக காதிதங்கள் - சிலரின் கை எழுத்துகள் அதில் இருக்கும் (எல்லாம் அவள்கள்தான்..)... இன்று பார்க்கும் போது கொஞ்சம் நமுட்டு சிரிப்பு வந்தாலும் அவை எல்லாம் நந்தவனத்து நினைவுகள் இல்லையா.. பள்ளிகூட நினைவுகள் என்பது ஒரு சில மனிதர்களையோ, நிகழ்ச்சிகளையோ நினைத்து கொள்வது அல்ல - அது ஒரு காலத்தை நினைத்து பார்ப்பது...

No comments: