அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Monday, April 28, 2008

5 வருட திட்டம்

5 வருடங்களில் கிட்டதட்ட எல்லா கிராமங்களும் தன்னிறைவு பெற்றுவிடும் என தமிழக உள்துறை சொல்கிறது. இதன் திட்டத்தை பற்றி அடிப்படை அறிவுடன் யோசித்தால் - முதலில் எல்லா கிராமங்களும் அருகில் உள்ள சிறு நகரங்களுடன் பாதைவழி இணைக்கபட வேண்டும். இன்னும் சாலை விஷயமே தெரியாத கிராமங்கள் சில நூறு உண்டு. சாலை போக்குவரத்து வசதிகள் வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க செய்ய வேண்டும் - விளை பொருட்களை விற்க சந்தைகள் அதிகமாக வேண்டும் - மருத்துவ வசதிகள் வேண்டும். ஆரம்ப கல்வி மற்றும் வாழ்க்கை கல்வி கிடைக்க செய்ய வேண்டும். விவசாயம், கால்நடை வளர்ப்பு, பால்வளம் மற்றும் சிறு தொழில் வளர்ச்சிகள் வேண்டும். இதற்கெல்லாம் தெளிவான திட்டம் வேண்டும் - செயல்படுத்த ஊழல் இல்லாத அதிகாரிகளும் ஆட்களும் வேண்டும் - ஓவ்வொரு 6 மாதமும் திட்ட மறு-மதிப்பீடு மற்றும் பணிகள் எத்துனை சதவீதம் நிறைவேறி உள்ளது எனவும் பார்க்கவேண்டும். அவற்றை பொது மக்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் - நாளிதழ்களும் இணையமும் இருக்கிறதே. இயற்கை விவசாயம் மற்றும் வல்லுனர்களின் யோசனைகளை கேட்கலாம். திட்டமிடபட்ட செலவு, ஆன செலவு, மிச்ச தொகை, மனித முயற்சி திட்டம் மற்றும் விவரங்கள் திட்டத்தின் நிலையை பற்றிய தகவல்கள் கொடுக்கும். இன்னும் நிறைய இருக்கிறது - இது ஏதும் செய்யாமல் கலர் டீவி இருக்கும் ஓட்டு வங்கி எல்லாம் தன்னிறைவு பெற்றவை என்ற கருத்தோடு தமிழக உள்துறை இருக்குமாயின் - முன்னேற்றம் என்பது வெறும் கனவுதான்.

No comments: