அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Monday, November 05, 2007

உறவுகளின் மதிப்பு

ஒரு ஆணிடம் பெண்ணும், பெண்ணிடம் ஆணும் எதிர்பார்க்கும் விஷயங்கள் என்னவாக இருக்க முடியும். இந்த கேள்வியும் பதிலும் பல முறை நான் பலரிடம் விவாதித்த விஷயங்கள்தான். என் வாழ்விலும் முழுக்க தெரியாமலேயே கொஞ்சம் கடைபிடித்தும் கொண்டிருக்கிறேன்.. எனினும் இதே கருத்தை வாழ்க்கை பற்றிய பல்நோக்கு அனுபவம் கொண்டவரிடத்திலும் இருந்து படிக்க நேர்வது ஒரு நல்ல அனுபவம்...

கேள்வி: பெரும்பாலும் ஒரு பெண் எதை விரும்புகிறாள்.

பதில்: மதிக்கபடுவதை; தனக்குள்ளிருக்கும் ஆளுமை ஆராதிக்கபடுவதை; நித்தம் நித்தம் நேசம் நிரூபிக்கபடுவதை; தன் பலவீனங்களைக் கண்டு கொள்ளாத கண்களை; தன் பலத்தை கொண்டாடும் குணத்தை; ஒலி உயராத குரலை; நான் உனக்கு மட்டும்தான் என்னும் உயிரழுத்தும் ஸ்பரிசத்தை; சபையில் கொடுக்கும் கெளரவம் தனிமையிலும் கொடுக்கப்படுவதை; தாம்பத்யம் முடிந்த தருணங்களில் "குளியல் அறைக்கு முதலில் நீ போ" என்று வழங்கப்படும் முன்னுரிமையை;

அடிப்படையில் இது பெண் விரும்பும் விஷயங்கள் மட்டும் கிடையாது - ஆணும் கிட்டதட்ட இதே விஷயங்களை பெண்ணிடமிருந்து விரும்புகிறான் - ஒருவருக்கு ஒருவர் இதனை பரிமாறி கொண்டால் மட்டுமே உறவு சாத்தியபடுகிறது. இது வெறும் வார்த்தை கோர்வைகள் அல்ல - வாழ்க்கை. மனிதரை மனிதர் மதிக்கும் பாங்கு. உறவு பலப்பட உதவும் மந்திரம் - எனினும் இதனை புரிந்து கொள்ளும் மனங்களுடன் மட்டுமே எதுவும் சாத்தியபடுகிறது.

No comments: