அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Monday, November 05, 2007

கல்யாணமாம் கல்யாணம்..

இன்றைக்கு எல்லாம் எதிர்பார்ப்புகள் நிறைய வளர்ந்து இருக்கிறது - 40% ஆண்களும் பெண்களும் நிறைய எதிர்பார்ப்புகளுடனே திருமண வாழ்வில் நுழைகிறார்கள். பெண் அல்லது மாப்பிள்ளை தேடும் போதே இதன் பிரச்சனைகளை பார்க்கிறார்கள். குறைந்தது 50 ஆயிரம் சம்பளமும், 2 முறையாவது வெளிநாட்டு அனுபவமும், இந்தியாவின் முதல்தர கம்பெனிகளில் வேலையும் கொண்டவர்களை மட்டுமே - அது பெண் வீடு ஆகட்டும், பிள்ளை வீடு ஆகட்டும் - விரும்புவதில் உள்ள லாஜிக் புரிவதில்லை எனக்கு. மனசு ஒத்துபோன திருமணம் என்பது கணிபொறி சார்ந்த தொழில் நுட்ப மனிதர்களின் (20 ஆயிரத்துக்கு மேல் சம்பளம் வாங்கும் பெரும்பாலர் - எந்த தொழில் செய்தாலும்) வாழ்வில் பெரும்பாலருக்கு இருப்பதில்லை. ஏதோ ஒத்து போவதற்காக வாழ்கிறார்கள் - அல்லது சீக்கிரம் மண முறிவுக்கு வருகிறார்கள். குழப்பமான வாழ்வில் பணமும் அமெரிக்க அனுபவங்களும் எந்த மாற்றத்தையும் தருவதில்லை. அதிகபடியான வேலை நேரத்தில் குடும்பத்தில் இழக்கிறார்கள். உடல் நலமும் மன நலமும் இல்லாமல் குழந்தை வளர்ப்பும், செக்ஸ் வாழ்க்கையும், அமைதியான ஒரு நேர கூட்டு குடும்ப இரவு உணவும் கூட - அடிப்படை நலன்கூட இல்லாமல் - நிரம்பி வழியும் வங்கி கணக்கும், ஷெர் மார்கெட்டும், பாரின் டூர்களும், அப்பார்ட்மெண்ட் வாழ்க்கையும் என்ன தர முடியும். பெரும்பாலான வீடுகளில் யாராவது ஒரு பையன் பார்க்க லட்சணமாக இருக்காவிட்டாலும் பரவாயில்லை கொஞ்சம் பணம் காண்பித்து நம்புவது போல பேசி அமெரிக்க மொழி பேசினால் - கூசாமல் பெண்ணை கூட்டி கொடுக்கிறார்கள் - லியாகத் அலிகான் வழக்கு ஒரு எடுத்துகாட்டு. லியாகத் முயற்சி மட்டும்தான் செய்தான் - முடித்து கொடுத்தது பெண் வீட்டிகாரர்கள்தான் - முடித்து கொடுக்க வைத்தது - இவர்கள் எதிர்பார்த்த அவன் காட்டிய தகுதிகள் - பணமும், அமெரிக்காவும் முதல்தர தொழில்படிப்பும். ஒரு வகையில் இது விபச்சாரம்தான். அதிகம் படிக்காதவர்கள், குறைந்த சம்பளம் உள்ளவர்கள், சிறிய அளவில் தொழில் வாழ்க்கை உள்ளவர்கள் - எனக்கு தெரிந்து நல்ல வாழ்க்கை வாழ்கிறார்கள் - தகவல் தொழில் நுட்ப வாழ்வில் உள்ளவர்களை விட 100% மடங்கு மேல். திருமண வாழ்வுக்கு அடிப்படை தேவை என்ன என்பதை யாராவது பிள்ளை பெற்ற பெண் பெற்ற பெற்றோர்களுக்கு எடுத்து சொன்னால் பல தற்கால தலைமுறை வாழ்க்கை உருப்படும்.

No comments: