அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Monday, November 05, 2007

ஆலந்துறை நினைவுகள்

பேரூர் போகும் வழியில் ஆலந்துறை பேருந்து கொஞ்சம் பழைய நினைவுகளை கொண்டு வந்தது. என் கல்லூரி காலங்களில் கோவைபுதூர் முருகன் காம்லெக்ஸில் தங்கியிருந்தேன். என்னுடன் ஸ்பிக் நிறுவனத்தில் பணிபுரிந்த இருவர் தங்கியிருந்தனர். ஒருவர் தூத்துகுடிகாரர் - சங்கர் கனேஸ் - மற்றொருவர் ஈரோடு அருகே - காசிராஜன் அவர் பெயர். எனக்கும் காசிக்கும் வயது வித்தியாசம் இருந்தாலும் நல்ல புரிதல் இருந்தது, எனவே எல்லா இடமும் சேர்ந்து சுத்துவோம். வார இறுதிகள் பெரும்பாலும் குனியமுத்தூர் அல்லது சுண்டக்காமுத்தூர் சாராயகடைகளில்தான் இருக்கும். கொஞ்சம் செட் சேர்ந்துவிட்டால் அப்புறம் கூத்தும் கும்மாளமும்தான் - அவரை மறுபடி ரூம் கூட்டிவர நிதானத்தில் இருக்கும் நான் ரொம்ப அவசியம் என்பதால் எல்லா கும்மாளங்களிலும் எனக்கும் இடம் உண்டு. ஒரு முறை ஆலந்துறையில் இருக்கும் அவரின் நண்பரை பார்க்க சென்றோம். அவர் ஸ்பிக் நிறுவனத்தின் சமையல் பகுதியில் வேலை செய்பவர். வயசாளி. அடிப்படையில் விவசாயி. நாங்கள் சென்ற நேரம் ஊரின் ஏதோ கோவிலில் கடா வெட்டு. ஒரே ஆட்டமும் பாட்டமுமாய் இருந்தது. வாய்கால் பாலம் அருகில் அவர் வீடு. அது கரும்பு சக்கையும் முட்டையும் போட்டு கட்டிய பாலமாம்.. மாலை மங்கும் நேரம் எல்லாம் கட்டெரும்புகள் நிறைந்து இருக்கும். வாய்க்கால் கரை ஓரமாய் ஜமுக்காளம் போட்டு 3 பாட்டில் நாட்டு சரக்கும் கோழியும் ஆடும் சப்பாத்தியும் சோறும் வைத்து ஒரே படையல்தான். 5 ரவுண்ட் முடிந்தவுடன் காசி பாட ஆரம்பித்து விடுவார் - பொதுவாக பழைய சிவாஜி பாடல்கள்தான். ராகமும், தட்டில் தாளமுமாய் பாட்டும் ஜீவன் அவர் - நம் ஆலந்துறை தோழர் எம்.ஜி.ஆர் ரசிகர் - மொத்தத்தில் அன்று ஒரே போட்டி பாடல்கள்தான்... அவர் பாட, அப்புறம் இவர் பாட... சண்டையில்லாமல் இருவரும் தூங்கும் வரை ஒரே இசை கச்சேரி... என் கவனம் சாப்பாட்டில் மட்டுமே இருந்தாலும், பாட்டின் சுவரஸ்யத்தில் சரக்கு அவர்களுக்கு அதிகமாகி இருந்தாலும் மற்றும் திரும்பி செல்ல பேருந்து வசதி இல்லாததாலும் - பாதை ஓரத்திலேயே படுத்து தூங்கும்படி ஆனது அன்று - அடுத்த நாள் விடுமுறை என்பதால் பிரச்சனை இல்லை. மறுநாள் விடிகாலை மறுபடி அரைதூக்க நிலையிலேயே அறை வந்து சேர்ந்தோம். இன்று நினைப்பினும் நல்ல சந்தோஷம் - எங்கு இருக்கிறார்களோ அந்த அறை நண்பர்கள் - சில காலங்களுக்கு பிறகு முற்றிலும் தொடர்பு இல்லை.

No comments: