அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Monday, November 05, 2007

வாழ்க்கை ஒரு புள்ளியில் இல்லை.

நம் வாழ்வில் பெரும்பாலரை - நல்லவர்கள் கெட்டவர்கள் அப்பாவிகள் மோசமானவர்கள் இன்னும் என்ன என்னவோ சொல்லி ஒரு அடைமொழியோடே மனதில் வைத்திருக்கிறோம். அடிப்படையில் பெரும்பாலரின் செயல்களே அவர்களை பற்றிய ஒரு மனத்தோற்றத்தை நம்முள் உருவாக்குகின்றன. அந்த செயல்களிக்கான அடிப்படைகள் யாராலும் கவனிக்கபடுவதில்லை. ஒருவரின் நடத்தை அல்லது ஒழுக்கம் முழுமையாக அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையில் - சில கற்பனை கோடுகளாலேயே நிர்ணயம் செய்யபடுகிறது. யாரும் அடிப்படையில் எந்த குணாதிசியமும் கொண்டவர்கள் இல்லை - ஒரே குணாதிசியம் கொண்டவர்களாக சமுதாயத்தில் எல்லாருடனும் இருந்து கொள்ள யாராலும் முடியாது - ஒழுக்கமும் அது போலதான். மாற வேண்டிய நேரத்தில் முகங்கள் மாறியே ஆகவேண்டும். யாரை பற்றியும் பொதுவான கருத்துகளை தவிர்க்கலாம் - எல்லாரையும் நேசிக்க முடியும். செயல்களை வைத்து ஆட்களை எடைபோடாமல் - செயலுக்கு பின்னால் உள்ள காரணிகளை கவனித்து பார்த்தால் நம் பார்வையின் பண்பாடு நமக்கே தெரியும். - நம்மை நாமே சுயநிர்ணயம் செய்து கொள்ளவும் முடியும். வாழ்க்கை ஒரு புள்ளியின் பார்வை அல்ல - புள்ளி ஒரு வடிவத்தின் காரணி. வடிவம் அறியாமல் அதை பற்றி சொல்லும் கருத்துகள் பயன் இல்லாதவை.

No comments: