அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Tuesday, August 14, 2007

மற்றவர்கள் மறுக்க சில கருத்துகள் ...

முன்னேற்றம் என்பது - பொருளாதாரம் மட்டும் கொண்டதல்ல. வாழ்க்கை முறை சார்ந்தது.

பெரும்பாலருடைய வாழ்க்கை கோட்பாடுகளினால் சூழப்படும் இருத்தலாகவே இருக்கிறது ... ஓவ்வொருவருடைய வாழ்க்கையிலும் புத்தனும் சித்தார்த்தனும் இருக்கிறார்கள். சித்தார்த்தனாக இல்லாதவனால் புத்தனாக முடிவதில்லை. புத்தனை அறிய சித்தார்த்தன் தேவை - இல்லாவிட்டால் புத்தன் வெறும் துறவி. அவன் அடையாளம் போதி மரம் - புத்தனின் கோட்பாடுகள் இல்லை.

பெரும்பாலரின் வாழ்க்கை வட்டங்களுக்குள் உள்ளது - அது ஒரு சிறிய வட்டம் - அந்த வட்டத்தில் உள்ளவர்களின் எண்ணங்களை போல. மற்றவர்கள் வட்டத்துக்கு வெளியே இருப்பதாலேயே வட்டத்துக்கு அப்பால் சிந்திக்க முடிகிறது. வட்டத்துக்குள் உள்ளவர்களோடான விவாதங்கள் பொதுவின் விதண்டாவாதங்களே. எவர் வட்டத்துக்கு வெளியே இருப்பினும் - அடிப்படையில் அவர்கள் அவரவர் வட்டங்களுக்கு உள்ளேயே இருக்கிறார்கள்.

எல்லாருக்கும் அடுத்தவர் ஒழுக்கமாகவும் நேர்மையாகவும் வாழவேண்டிய தேவை இருக்கிறது. ஏனெனின் சுயஒழுக்கம் அதனை கொண்டே அளவிடபடுகிறது.

இக்கருத்துகளை பகிர்ந்து கொள்ள இன்னும் சரியான துணை கிடைக்கவில்லை - இவைக்கு மாற்று கருத்துகள் இருக்கலாம். கருத்துகளே பின்னர் கருத்துகளை மாற்றி கொள்ளலாம்... எனினும் தற்போதைக்கு காலம் மட்டுமே துணையாக இருக்கிறது.

1 comment:

Chittoor Murugesan said...

அரசு ஊழியர் வயிற்றில் பிறந்தேன் .அரசு மருத்துவமனையில் பிறந்தேன். அரசு பள்ளி,கல்லூரிகளில் படித்தேன். அன்று அரசு இலவசமாக வழங்கிய குடிநீரில் *குளித்தேன். (அரசுக்கு பணம் ஏது? ஒரு ஏழை இன்று 50 காசு தீப்பெட்டி வாங்கினால் அதில் 10 காசு எக்சைஸ் வரி அரசுக்கு போகிறது.)



இன்று அந்த வினை தீர/அரசுக்குப் பட்ட கடன் தீர்க்க புதிய இந்தியாவை உருவாக்க திட்டம் தீட்டி கடந்த 10 வருடங்களாய் லட்ச கணக்கான ரூபாய்களை செலவழித்து வருகிறேன்.



பணமுதலைகளுக்கு வரி ஏய்ப்புக்கு உதவ சட்ட,கணித புலிகளான ஆடிட்டர்கள் உள்ளனர். பாவம் இந்த ஏழைகளின் நிலைதான் என்ன?




வினை செய்தால் தான் காசு வரும்,அந்த காசுடன் வினையும் வரும். அந்த காசு போனால் வினை போகும். இது என் அனுபவம்.



என் நண்பன் ஒருவன் நான் அறிமுகம் செய்த முதியவரை ஏமாற்றினான். அந்த வயதில் அது என்ன ஏது என்பது தெரியாது. பிறகு அதே நண்பனுக்கு 900 ரூபாய் சம்பளத்துக்கு நான் இந்தி ஆசிரியனாக வேலை செய்ய வேண்டியதாகிவிட்டது.




அதிலும் 300 ரூபாய் குவார்ட்டர்ஸ் வாடகை, 100 ரூபாய் கரண்டு பில் போக ரூ.500 கைக்கு வரும். ஆனால் பாருங்கள் வினையின் வலிமை. அவன் என்னை குடி வைத்த வீடு அவன் அப்பா கட்டியது.அவருக்கு காலில் புண். அங்கு குடி போன சில நாட்களில் எனக்கும் காலில் புண் வந்து விட்டது.



இந்த ரகசியம் தெரியாது பணம்,பணம்,பணம் என்று ஜனம் அலைகிறது. வினை தீர்க்க‌,க‌ட‌ன் தீர்க்க‌ வேண்டி நோய்க்கோ,ரெயிடுக்கோ,த‌ண்ட‌னைக்கோ ஆளாக‌ வேண்டி வ‌ந்தால் ம‌ட்டும் புல‌ம்புகிற‌து.