அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Tuesday, August 14, 2007

தொலையும் வாழ்க்கை...

நகரம்... தன்னுள் புதைந்த எல்லோரையும் தன்னுள்ளே கரைத்து கொண்டு ஓடும் திரவ வாழ்க்கையை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நானும் விதிவிலக்காக இல்லை. நான் என்னை தொலைத்து விட்டதை உணர்கிறேன். சிரிப்பும், பேச்சும், இலக்கியமும், கவிதையும், தோழமையும் இன்னும் பிற வாழ்க்கை சார்ந்த விஷயங்களும் நீங்கி... என்னை தொடரும் காகிதங்களை நானும் தொடர்ந்து கொண்டு இருக்கிறேன் - அதுவே வாழ்க்கை என எல்லாரும் சொல்லும் வழியில். தொழில் என்பது வாழ்வை வளமாக்கவே - வாழ்வை பறித்து கொண்டு ஓடும் தொழில் என்றும் இருக்கிறது... எனக்கு பிடித்த நான் வெளிப்படும் தொழிலுக்கு தைரியமில்லாமல், என்னை தொலைக்கும் தொழிலில் இயந்திரத்தனமாக இயங்கும் இந்த வாழ்க்கை ஒரு நாள் என்னை என்னிடமிருந்து கொள்ளை கொண்டு போக போகிறது. எல்லாம் பேசலாம் - காகிதங்களுக்காக வாழாமல் இருந்தால். ஒரு ஓவிய ஆசிரியராக ஏதோ ஒரு பள்ளியில் வேலை செய்ய பிரியபட்ட காலம் உண்டு. பின்னர், காகிதங்களின் தாக்கமும் தேவையும் எழ, இப்போது கொண்ட தொழில். இது மரம் அறுக்கும் தொழில். தொழிற்சாலையில் நிறைய மரங்கள் உள்ளன... எல்லாம் வெட்டபட்டவை. இவைகள் கதவாகலாம், கட்டிலாகலாம், மேசையும் நாற்காலியும் ஆகலாம். ஆயிரம் ஆண்டு வாழும் மலை மரங்களை இனி வாழ்வில் பார்ப்பது அரிது. எல்லா மரங்களும் போன பிறகு தொழிற்சாலைகள் தன்னை தானே அறுத்து கொள்ளும்... காலம் வழி சொன்னால் .. என் கவிதைகளும் ஓவியங்களும் கொண்ட உலகோடு மரணமாகிவிட வேண்டும். ரெளத்திரம் கொண்ட மனதோடு அலையுதல் ஒரு வகையான வேதனை... அதுவும் இல்லாவிட்டால் வாழ்க்கை வெறிச்சோடி போய்விடுமோ என்ற பயமும் உண்டு...

No comments: