அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Friday, August 17, 2007

கனவும் உழைப்பும்...

ஒரு திரைப்படம்... அது வெகுஜன இயல்பு சார்ந்த திரைப்படம். பொதுவில் அத்தகைய திரைப்படங்களை பார்க்கும் வாய்ப்பினை மறுத்துவிடுவதுண்டு. இந்த முறை மறுக்க முடியாத அளவு எல்லா பத்திரிக்கைகளும் நண்பர்களும் தூண்டியதால் பார்க்க நேர்ந்தது...திட்டியோ பாராட்டியோ எல்லா மீடியாக்களும் அந்த திரைப்படத்தை பற்றி ஒரு மாதம் எழுதி தீர்த்தன... திரைப்படம் என்னை பொருத்தவரை குழந்தைகளுக்கானது... சில காட்சிகள் பெரிவர்களுக்கானது.. எதுவும் வளர்ந்தவர்களுக்கானது இல்லை. நான் சொல்வது பொது அறிவு அல்லது பொதுவான அறிவு பற்றி மட்டுமே. எனினும் ஒரு மஜாவுக்காக மட்டும் பார்க்க கூடிய திரைப்படமாக இருந்தது..

நான் இந்த பதிவில் சொல்ல வருவது மற்றுமொரு சிந்தனை - இந்த திரைப்படத்தில் வேலை செய்தவர்கள் எல்லாருமே நல்ல சினிமா ஞானம் உள்ளவர்கள்.. நிறைய உலக திரைப்படங்களுடன் பரிச்சயம் உள்ளவர்கள்.. சிந்தனையாளர்கள் - இவை அவர்களின் மற்ற படைப்புகளில் இருந்தே நான் சொல்கிறேன்... எனினும் - இந்த திரைப்படத்தை பற்றி அவர்கள் யோசிக்கும் போது, படமாக்கும் போது, கதை அமைக்கும் போது இதில் உள்ள அபத்தங்களை அவர்கள் கவனித்திருக்காமல் இருக்க வாய்ப்பு இல்லை. எல்லாம் இருந்தும் ஒரு வியாபாரம் என்று வரும்போது சிந்தனை ஆற்றலை கொஞ்சம் தள்ளி வைத்து கொண்டு, முட்டாள்தனமான கனவை திறமையாக படைக்க தங்கள் அறிவை உபயோகபடுத்தியுள்ள பாங்கு சிந்திக்க வைக்கிறது..

சில காட்சிகளுக்கு கதாநாயகியின் அரை நிர்வாணம் தேவைபடும் போது - புத்திசாலி கதையாசிரியர் அதற்க்கு இடம் கொடுத்து தள்ளி உட்காருகிறார். தன் மகளை விட வயது குறைந்த கதாநாயகியை துரத்தி துரத்தி காதலிக்கும் கதாநாயகனை எந்த வித விகல்பமும் இன்றி சமுதாயத்தை ஏற்க வைக்க எல்லாரும் பாடுபட்டு செலவழித்து இருக்கிறார்கள் - இவர்கள் அனைவரும் பத்திரிக்கை செய்திகளில் வயது குறைந்த பெண்ணை பெண்டாளும் வயதான ஆண்கள் பற்றிய செய்திகளை படித்து காரசாரமாக விமர்ச்சனம் செய்பவர்கள்தான்... எனினும் எல்லாம்.. எல்லாம்.. ஒரு வியாபாரத்துக்காக.. அறிவும் திறமையும்.. கைகட்டி நிற்க்க .. அபத்தமும், ஆபாசமும்.. முன்வைத்து சினிமா வியாபாரம்.. - ஒரு வேலை இப்படி இருப்பதுதான் பிழைக்க தெரிந்து வாழ்வதோ....

No comments: