அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Tuesday, August 14, 2007

தனிமையும் இலக்கியமும்...

காலம் இயங்கி கொண்டு இருக்கிறது. பின்னிரவுகளில் தூக்கம் தொலைந்து விட... ஜன்னலுக்கு வெளியே யாருமற்ற வெளியை காரணமின்றி பார்த்தபடி அமர்ந்திருக்கும் தருணங்கள் அதிகமாகி விடுகின்றன. சில இரவுகளில் வாழ்தல் பற்றிய ஒரு கேள்வி ஆயிரம் அர்த்தங்கள் கொண்ட இருள் போல என்னுள் கவிகிறது. சில புத்தங்களை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. அவை கவிதைகளும் இலக்கியங்களும் இல்லை - அவைகளை நீங்கள் சுயமுன்னேற்ற புத்தகங்கள் எனவோ, கற்பனை கதைகள் எனவோ சொல்லலாம். ரசவாதி மற்றும் தன் பொக்கிஷத்தை விற்ற துறவி என்பவை அந்த புத்தகங்கள். இப்புத்தங்களும் மேலும் சில கவிதை மற்றும் இலக்கிய புத்தகங்களும் படித்து பின்னர் தனிமையில் அவற்றின் கருத்துகளை எனக்குள்ளெ பகிர்ந்து கொள்ளும் போதெல்லாம் எனக்கு சில கருத்துகள் தோன்றுவதுண்டு... என் வாழ்வில் நடந்த சில சம்பவங்களையும், பிறர் வாழ்வுகளை கவனித்த பின்னரும் - எல்லோர் வாழ்விலும் இலக்கியமும் கவிதையும் இருப்பதாகவே தோன்றுகிறது. இலக்கியமும் கவிதையும் வாழ்வை சொல்லும் மொழி எனப்படும் போது... எனக்கு தோன்றுகிறது... வாழ்தல் - இன்னும் சரியாக புரிந்து கொள்ளபடாத ஒரு கலை - நிறைய பேருக்கு அது புரியும் போது வாழ்வு முடிந்து விடுகிறது.

No comments: