அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Tuesday, August 14, 2007

ஓர் இரவு...

சென்னையின் உணவு முறை விசித்திரமாக இருப்பதாக உணர்கிறேன் - பெரும்பாலும் அவை சுவை சார்ந்ததாக இல்லாமல் பசிக்கு உண்பதாகவே இருக்கிறது. மனசு சுவை தேடும் நேரங்களில் சிறிய மிக சிறிய உணவங்களிலும் உண்பதுண்டு. நான் இருக்கும் பகுதியிலேயே ஒரு மிக சிறிய கடை உண்டு - இட்லி, ஆப்பம் கிடைக்கும். தேங்காய் சட்னி என்ற பெயரில் தேங்காய் சாறுடன், நிறைய பச்சை மிளகாய் அரைத்து ஒரு திரவம் கிடைக்கும். அரசானிக்காய், வெண்டை, முருங்கை மற்றும் வாழைக்காய் வைத்து சாம்பார் என்ற திரவமும் உண்டு. ஒரு கேரள தம்பதியினர் கடை நடத்துகிறார்கள். ஒரு முறை அவர்கள் இல்லாத ஒரு முன்னிரவு நேரத்தில் குழந்தைகள் சமைத்தார்கள் - கூச்சலும் கிண்டலுமான சமையல் அது. பெண் குழந்தைக்கு 8 அல்லது 10 வயது இருக்கும்... ரொம்ப பொறுப்புடன் முட்டை உடைத்து ஆம்லெட் எல்லாம் போட்டு கொடுத்தார்கள். பையன் 16 வயது இருக்கும் - அதட்டலும் மிரட்டலுமாக ஆயினும் தங்கையுடன் சுமுக உறவும் கொண்டவனாக சமைத்தார்கள்... உணவும் கூட.. கொஞ்சம் சுகமாக அனுபவம் அது.

No comments: