அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Monday, September 05, 2005

இளையராஜாவின் திருவாசகம்...

இளையராஜாவின் திருவாசகம்...கண் மூடி கேளுங்கள். உயிர் உங்களிடம் இருந்து உருகும். மெல்லிய முன்னிரவில், நிலவு காய, தென்னை
மரங்களோடு, மனம் கொண்ட துணையோடு, கண் மூடி... ஒரு தியானம் போல, கேட்க கேட்க... உயிர் நம்மில் என்ன வடிவம் என்பது
புலனாகிறது. பொதுவில் இசை ரசனை என்பது காலத்தோடு சேர்ந்தது. சில வகை இசை மட்டுமே காலம் தாண்டியும் ஜீவிக்கலாம். திருவாசகம்
அப்படி ஒன்று. மெல்லிய இலை ஒன்று காற்றில் லயத்தோடு பறக்கும் லாவகம் இசை ரசிக்கும்போது வருமேயானில் ஜீவிதம் புனிதமாகிறது.ஓதுவாரின் திருவாசகம் ஆன்மீக சாரல், இசை கொண்ட இந்த திருவாசகம் மனசு நிறைய மட்டும்.

No comments: