அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Sunday, August 21, 2011

வாழ்க்கை இன்னும் மிச்சமிருக்கிறது...

நீண்ட நெடுநாட்களுக்கு பிறகு என் வலைப்பூவில் எழுத ஆரம்பிக்கிறேன். இடையே கணக்கு இல்லாத அளவுக்கு காலம் உருண்டோடிவிட்டது. காலம் என்பது நாட்காட்டி மட்டுமல்லவே, எத்தனையோ வாழ்வனுபவங்களை தந்து விட்டு ஒன்றுமே தெரியாதது போல, மவுனமாக அதுவும் நம் கைபிடித்து வந்து கொண்டுதான் இருக்கிறது.


எதனையும் பகிர்ந்து கொள்வதற்க்கு யாரும் இல்லாத தனிமையில் புத்தகங்கள்தான் தோழனாகின்றன. இந்த முறை கோவையில் புத்தக கண்காட்சியில் சில புதிய புத்தக தோழர்களுடன் அறிமுகமானது.


  1. எனக்கும் என் தெய்வத்துக்குமிடையேயான வழக்கு - விக்ரமாதித்யன் - கட்டுரைகள், நேர்காணல்கள் - சந்தியா பதிப்பகம்.
  2. அபிதா - லா.ச.ராமாமிருதம் - நாவல் - புதுமைபித்தன் பதிப்பகம்.
  3. பெயர் தெரியாமல் ஒரு பறவை - வண்ணதாசன் - சிறுகதைகள் - சந்தியா பதிப்பகம்.
  4. பெய்தலும் ஓய்தலும் - வண்ணதாசன் - சிறுகதைகள் - சந்தியா பதிப்பகம்.
  5. சொல்லவே முடியாத கதைகளின் கதை - ஆதவன் தீட்சண்யா - சிறுகதைகள் - பாரதி புத்தகாலயம்.
  6. சுண்ணாம்பு கேட்ட இசக்கி - .கா.பெருமாள் - நாட்டுபுற கள ஆய்வு அனுபவங்கள் - யுனைடட் ரைட்டர்ஸ்
  7. சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன் - சிறுகதைகள் - தமிழினி
  8. அனல்காற்று - ஜெயமோகன் - குறுநாவல் - தமிழினி


இந்த புத்தகங்களையும், இவை ஏற்படுத்தும் நினைவுகளையும் தொடர்ச்சியாக பதிவிட விருப்பம்.. காலம் கை பிடித்து காத்திருக்கிறது.

1 comment:

Anonymous said...

இந்த புத்தகங்களையும், இவை ஏற்படுத்தும் நினைவுகளையும் தொடர்ச்சியாக பதிவிட விருப்பம்.

- vazthukkal.
- Pravinska.