![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiV9gWDDm-wiMcz8A96ioA94kFkElFQmzcAQq0WVQ9NxVF9EXVo4bjonLWhsAcHcyyLz6doyfwsOlK1eUQJT8TsjRxsXvTt-8GzGC787FztX-N5O4k6NWl0HzzuK3XPpGviarmG/s320/kalyanji_thumb4.jpg)
வண்ணதாசனை படிக்கும் போது மறுபடி ஒருமுறை வாழ்க்கையை முதலில் இருந்து வாழ்ந்துவிட வேண்டும் என்ற ஆசை வந்து விடுகிறது. கல்யாண வீடுகளிலும், இழவு வீடுகளிலும் பார்க்கும் வயது மூத்த வயசாளிகளிடம் பத்து நிமிடமாவது அவர்களின் கையை பிடித்து கொண்டு நின்று விட வேண்டும் போல இருக்கிறது. மழை, வெயில், அணில், குருவி எல்லாம் நின்று நிதானமாக ரசிக்க வேண்டும் போல இருக்கிறது. எல்லாருக்குள்ளும் இருக்கும் சொல்லாத கதைகளை சொல்ல சொல்லி ராப்போது முழுக்க ஒரு நீண்ட பயணத்தில் கேட்க வேண்டும் போல இருக்கிறது. நெல்லையப்பரையும் காந்திமதி அம்மையாரையும் நாள் முழுக்க பார்த்து கொண்டு இருந்துவிட வேண்டும் போலவும் இருக்கிறது. அந்த மனிதர் அப்படி ஒரு பாடு படுத்திவிடுகிறார். சில நேரங்களில் நம்மை அறியாமல் கண்ணீர் வடிகிறது. சில நேரங்களில் நினைத்து நினைத்து வெடித்து சிரிப்பு வருகிறது. - மொத்ததில் எல்லாரையும் எல்லாவற்றையும் ரசிக்க வைத்து விடுகிறார். இப்படி ஒரு மனிதன் வாழும் காலத்தில் பதிவிடும் அனுபவங்கள் காலம் எல்லாம் கடந்து நிற்க்கும்.
No comments:
Post a Comment