அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Saturday, August 27, 2011

மழைக்கால மேகம் ஒன்று...

மழை இப்போது வந்துவிடும் போல மேகம் கட்டி நின்றுகொண்டிருக்கிறது. காற்று நன்றாக இருக்கிறது. எந்த நிமிடமும் மழையின் முதல் துளி விழுந்துவிடலாம். இந்த காற்று தூரத்தில் பெய்யும் மழையின் வாசத்தையும் சுமந்து கொண்டு அலைந்துகொண்டிருக்கிறது. தூரத்து மலை அருகே எல்லாம் மேகம் கருப்புகட்டி மலையை மறைத்து கொண்டு நிற்கிறது. மலை மேல் எல்லாம் மழை பெய்து கொண்டிருக்கும் - மெல்லிய ஒரு மழைத்திரை தூரத்தில் தெரிகிறது. மழை பெய்ய ஆரம்பித்துவிட்டால் தேநீர் சுவைக்கு நாக்கு ஏங்க ஆரம்பித்து விடுகிறதுவானம் இன்னும் சிணுங்கி கொண்டுதான் இருக்கிறது. சிணுங்கும் வானம் குழந்தையை போல. தூக்கி இடுப்பில் வைத்து கொள்ள தூண்டும் அழகு அது..!!