அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Wednesday, June 02, 2010

எங்கள் இசையின் பிரம்மா...

மீசை முளைக்க தொடங்கிய பதின்வயதுகளில் அறிமுகமானது பண்ணையபுரத்து கலைஞனின் இசை. எல்லோரையும் போல சினிமா பாடல்களில் தன்னையும் தன் மனதுக்கு பிடித்த பெண்ணையும் கொண்டு கனவு காணும் வயதுகளில், பிண்ணனி பாடல்கள் இசைஞானிதான். அந்த இசை பித்து இன்றுவரை தொடர்கிறது - இன்னும் மரணம் வரை இருக்கும்.

எத்தனையோ விமர்சனங்கள் அவர் மீது - இசை பற்றியும், அவர் வாழ்க்கை பற்றியும். என்ன பேசினாலும், அவர் ஒரு மகா கலைஞன் என்பதில் மாற்று கருத்து பலருக்கும் கிடையாது.

ஒரு கட்டுரையில் படித்தது ...

” 900 படங்கள், ,4500 பாடல்கள், மொழிகள் கடந்த இசை என ராஜாவின் ராஜ்ஜியம் கற்பனையிலும் பிரமிக்க வைப்பது. வழக்கமான சினிமா இசையல்லாது, 40 தனி ஆல்பங்களை வெளியிட்டுள்ளார் இளையராஜா. அவற்றில் பெரும்பாலானவை விற்பனையில் பெரும் சாதனை படைத்தவை. கிராமி விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டவை. 35 ஆண்டுகள் தன் இசையால், பாடல்களால், குரலால் இந்த தமிழ் சமூகத்தையே கட்டிப்போட்ட ஒப்பற்ற இசைப் படைப்பாளி. ஒவ்வொரு முறை கேட்கும்போதும் புதிதாய் பிறந்த உணர்வைத் தரும் இசைக்குச் சொந்தக்காரர். “

இளையராஜாவின் இசை வெறும் இசை மட்டுமல்ல - ஒரு அற்புதமான தியானம். உழைப்பும், கலை மேல் கொண்ட மரியாதையும் தெரியும் அவர் இசையில். பிரமிக்கதக்க இசை நுணுக்கங்கள் மற்றும் வாத்திய தேர்வு ஒரு சுகமான ஆனந்தம்.

வைரமுத்து, வாலி மற்றும் பலரின் அற்புதமான கவிதைகளாகட்டும், எஸ்.பி.பி, யேசுதாஸ், சுசீலா, ஜானகி ஆகியோரின் குரலாகட்டும் - இளையராஜாவின் இசையன்றி இவ்வளவு பெயர் பெற்றிருக்க முடியாது. பலரின் சினிமா உலக வாழ்க்கையின் வெற்றிக்கு பின்னர் அவர் இருந்தார் - பல கதாநாயகர்களின் வெற்றிகள் உட்பட. மறந்து போன திரைப்படங்கள் கூட நினைவில் வருவது அவர் பாடல்களின் வழியாகதான். பாடல் மட்டுமன்றி பிண்ணனி இசையின் நாயகன் அவர்தான் இத்தனை வருடங்களாக.

புல்லாங்குழழும், வயலினும் அவர் பாடல்களில் கொஞ்சி விளையாடும் அழகே அழகு - அதற்க்கு 1000 பாடல்களை உதாரணம் காட்டலாம். எங்கள் யாருக்கும் உலக இசை தெரியாது - ஆனால் எங்கள் உலகத்தின் இசையை அறிமுகபடுத்தியவர் அவர்தான். உலக இசை பற்றிய அதீத ஞானம் உள்ளவர்களுக்கு அவர்மேல் கருத்துகள் இருக்கலாம் - எங்களை பொருத்தவரை இசை என்றால் முதலில் இளையராஜாதான்.

அவர் பிறந்த நாளான இன்று - அவர் இருக்கும் காலங்களில் வாழ்தல் குறித்த மகிழ்ச்சியுடன் ... இந்த பதிவு அவருக்காக.

1 comment:

உலக சினிமா ரசிகன் said...

ஆரண்யகாண்டம்-படமா எடுக்கிறானுங்க.....மயிறானுங்க என்ற தலைப்பில் நானும் எனது கருத்தை சொல்லி உள்ளேன்.
மேலும் விபரமறிய எனது வலைப்பக்கம் வாருங்கள் நண்பர்களே!