அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Sunday, July 30, 2006

சித்தார்தர்களும் புத்தர்களும்…

ஒரு பொதுவான நண்பருடன் கலந்துரையாடலின் போது பற்றற்று வாழும் வாழ்க்கை பற்றி பேசினோம்… சித்தார்த்தர்கள் தான் நல்ல புத்தர்கள் ஆக முடியும் என்ற என் கருத்து பெரும் விவாதத்துக்கு உள்ளானது. ஆசைகள் இல்லாமல் வாழ்வது தியானம் என்றால் – ஆசைகளை கொண்டு வாழும் அற்புதமான வாழ்க்கை தியானத்துக்கு மேலானது என்பது என் கோட்பாடு. காதலும் ஆசையும் கொண்ட வாழ்க்கை வேண்டும் – ஆனால் இழப்புகளுக்கு வருந்த கூடாது. வருவது போலவே போவதும் இயல்பானது என்று கண்ணதாசன் சொல்வாராம். முற்றிலும் துறந்த துறவியாகி தான் மட்டும் சொர்கம் போவதைவிட, இருக்கும் வரைக்கும் சுக வாழ்க்கை வாழ்ந்து மற்றவர்களுடன் சேர்ந்து பூலோக சொர்க்கம் காண்பதில் தவறில்லையே. இன்னொன்றும் கவனியுங்கள் – அது அருணகிரிநாதராகட்டும், பகவான் கிருஷணராகட்டும் அல்லது கண்ணதாசன் ஆகட்டும் – எல்லா விளையாட்டுகளும் விளையாடி முடித்தபின்னரே அறிவுரைகள் சொல்ல ஆரம்பித்தார்கள். 20 வயதிலேயே தலையணை புத்தகங்களை படித்துவிட்டு வேதாந்தமும் சித்தாந்தமும் பேசும் நண்பர்களே மன்னியுங்கள்.. ஜெ.கிருஷ்ணமூர்த்தி சொல்வதை கவனியுங்கள்.. “இளைஞர்களே.. இளைஞிகளே… இது உங்கள் பருவம்…பூக்களை பாருங்கள்…பட்டாம்பூச்சிகளை பாருங்கள்…வாழ்க்கை ஒரு அழகான தோட்டம் போன்றது…ரசியுங்கள்..” – கலந்துரையாடலின் போது ஒரு தோழி சொன்னார் – சித்தார்தரை விட யசோதா உயர்ந்தவர் என்று… நான் முற்றிலும் ஏற்றுகொண்ட விஷயம் அது.

No comments: