அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Thursday, March 22, 2007

திரைப்படமும் வாழ்வும்...

பாபெல் என்ற திரைப்படமும், புரூப் என்ற திரைப்படமும் - பாபெல் திரைக்கதை மூலமாக கொண்டது. உலகில் வேறு வேறு இடங்களில் நடக்கும் சம்பவங்கள் - ஒரு அடிப்படை சம்பவத்தால் இணைக்கபடும் விதம். இம்மாதிரி திரைப்படங்களை கதைகளாக படித்த அனுபவம் இருக்கிறது. ராஜேஸ்குமார் கூட மாத நாவல்களில் கையாளும் விஷயம் இது. சொல்லும் படியான விஷயங்கள் - உணர்வுபூர்வமான நடிப்பு மற்றும் குழப்பாத
திரைக்கதை. படம் முழுவதும் பார்த்தால்தான் புரியும். ஜப்பானிய பெண்ணின் மனோதத்துவம் தொடர்ப்பான நுட்பமான உணர்வுகளை வெளிப்படுத்திய விதம் நிறைய விமர்ச்சனங்களை கொண்டுவரலாம். புரூப் - சிறிய ஆனால் சொல்ல தகுந்த கதை. ஒரு வகை மனோ வியாதியால் பாதிக்கபடும் தந்தையும், அவர் மகளுக்கும் கணிதம் சார்ந்த விஷயங்களில் இருக்கும் அதீத ஆர்வம் - அவர்கள் / அவள் எழுதும் கணித முறை - அது சார்ந்த - அவளுக்கும் அவள் சகோதரி மற்றும் காதலனுக்குள்ளான மனோரீதியான இடைவெளிகள் என கதை அமைகிறது. திரைப்படத்தின் வசனங்கள் ஒரு நல்ல விஷயம். திரைக்கதை அமைப்பு திரைப்படத்தின் சில காட்சிகளுக்கு பின்னரே புரியும்படி இருக்கிறது. இரண்டு படங்கள் இந்த வாரம் - டிவிடி புண்ணியத்தில்.

எந்த ஒரு சம்பவமும் - அது சார்ந்த கருத்துகளும் ஒவ்வொருவரின் சுய அனுபவங்களின் அடிப்படையிலேயே எடுத்துகொள்ளபடுகிறது என்பதற்க்கு சமீபத்திய ஒரு திரைப்படத்தின் இறுதிகாட்சியாக வரும் கற்பழிப்பு காட்சி உதாரணம். அந்த சம்பவம் - அந்த மண்ணில் நடந்திருக்கிறது - இன்னும் நடப்பதற்க்கான சாத்தியம் இருக்கிறது. தென் தமிழ் கிராமங்களில் மட்டுமல்ல, இந்தியாவின் பல பகுதிகளிலும் இந்த சம்பவத்திற்க்கான சாத்தியமும்
இருக்கிறது - சம்பவம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. காரணங்கள் வேறு வேறாக இருக்கலாம். சம்பவம் திரைப்படத்தில் காண்பிக்கபட்ட முறை பற்றிய கருத்துகளும் - அதற்க்கான இயக்குனரின் கருத்துகளும் பத்திரிக்கை செய்திகளாகிவிட்டாலும், திரைப்படம் மக்களிடையே சென்று சேர்ந்துவிட்டது. இதனை பற்றி பேசுபவர்களுக்கு நிறைய தீனியும் கிடைத்துவிட்டது.

No comments: