அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Thursday, March 22, 2007

மனிதர்களும் உணர்வுகளும்

நான் பொதுவாக இரவு உணவுக்கு ஒரு சிறிய உணவகம் செல்வதுண்டு. பலதரப்பட்ட மனிதர்களை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் இடம் அது. தினமும் முட்டை பரோட்டா சாப்பிடும் பழ வண்டிகாரர், எல்லா அரசையும் விமர்ச்சிக்கும் வயதான பெரியவர், சத்தமான எல்லா நேரமும் செல்போனில் பேசி கொண்டே சாப்பிடும் ஒருவர், கலாட்டா மாணவர்கள் என கலவையான இடம் அது. கடை வைத்திருப்பவர்கள் புதுக்கோட்டையில் இருந்து வந்தவர்கள். உணவின் ருசியும் தரமும் குற்றம் சொல்ல முடியாதவை. ஒரு பெரியவர் அங்கே வேலை செய்கிறார். எல்லாருக்கும் நல்ல கவனிப்பு. ஒரு சனிக்கிழமை மதிய நேரம் அவர் என்னிடம் பேசி கொண்டிருந்த போது அவர் மகன் ஒரு மனஸ்தாபம் காரணமாக விலகி சென்றுவிட்டதாகவும், தான் இங்கே வேலை செய்து ஊருக்கு பணம் அனுப்பி கொண்டிருப்பதாகவும் சொன்னார். சென்னையில் இப்படி நிறைய மனிதர்களை பார்க்கிறேன். பெருமாலும் உறவுசார்ந்த பிரச்சனைகள் எல்லாருக்கும் இருக்கிறது. சந்தோஷமான குடும்ப அமைப்பின் வாழ்க்கை நிறைய பேருக்கு வாய்ப்பதில்லை - காரணங்கள் எல்லாம் திசையுலும் இருக்கின்றன. எல்லா மனிதர்களுக்கு இயல்பிலேயே சில கருத்துகள் இருக்கின்றன - அவைகளை தோண்டி தனக்காக மாற்ற முயலும் போது எல்லா பிரச்சனைகளும் ஆரம்பிக்கின்றன. உணர்வுகளின் குவியலாகவே பெரும்பாலும் மனிதர்கள் இருக்கின்றனர். அவர்களை அவர்களாக வாழ விடுதல் என்பது மனித சுதந்திரத்தின் வெளிப்பாடு.
வழிமுறைப்படுத்தும் முயற்சிகள் கருத்துகளை காயமாக்காமல் இருந்தால் சந்தோஷமான குடும்பங்களுக்கு இன்னும் வாய்ப்புகள் உண்டு. எல்லாம் பேசும் முறையிலும் பழகும் முறையிலும்தான் இருக்கிறது. அடிப்படை மனோதத்துவ அறிவு எல்லா இடங்களிலும் தேவைபடுகிறது.

No comments: