அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Thursday, March 22, 2007

வாகன யோகம்

என்னுடைய எந்த வாகனமும் ஓட்ட தெரியாத குணம் பெரிய நமுட்டு சிரிப்புகளையும் - எனக்கு பின்னால் நிறைய கேலிகளையும் உண்டாக்கிவருகிறது. வருத்தமில்லை எனினும் - என் கருத்துகளை பகிர்ந்து கொள்ளாதவரையில் ஒரு திருப்தி இருக்காது. அது என்னவோ ஆரம்ப காலத்தில் இருந்தே நமக்கும் வாகனங்களுக்கும் ஒத்து போகவில்லை. வெகு பாதுகாப்பாக வளர்க்கபட்ட ஆரம்பகால வாழ்க்கைமுறையோ, அல்லது என் அப்பாவுக்கும் எந்த வாகனமும் ஓட்ட தெரியாது என்ற நிலையோ - என்னை எந்த வாகனம் பக்கமும் ஒதுங்க முடியாமல் செய்து விட்டது.

அப்பா சைக்கிள் மட்டுமே ஓட்டுவார். அலுவகத்தில் ஜீப், கார் என்று கொடுத்துவிட்டதால் அவருக்கு எதுவும் தேவையே இல்லாமல் போய்விட்டது. நமக்கு ஆரம்ப காலத்தில் இருந்தே சாலை போக்குவரத்து மேல் ஒரு பயம் உண்டு. ஒரு வழியாக மோட்டார் சைக்கிள் ஓட்ட கற்று கொண்ட காலங்களிலும், சொந்தமாக சாலையில் ஓட்ட தைரியம் வரவில்லை. பெரும்பாலும் அதற்க்கான தேவை இல்லாமல் போய்விட்டதும் ஒரு காரணம்.
பெரும்பாலும் பஸ் அல்லது நடராஜா சர்வீஸ். ஏதாவது "பிக்கப்" விஷயங்கள் கூட இதனால் இல்லாமல் போய்விட்டது - அதற்க்காக ஒன்றுமே இல்லாமல் இல்லை. வண்டி வைத்திருப்பவர்களை விட அதெல்லாம் சந்தோஷமாகதான் இருக்கிறது. ஒரு வகையில் பஸ் ஆட்டோ பயணங்கள் வாழ்வில் நிறைய சொல்லி கொடுக்கின்றன. எனக்கு மனிதர்களை பார்க்க பிடிக்கும் - அது பெரும்பாலும் சாத்தியபடுகிறது. இது ஒரு அடிப்படை கலை என்று பலராலும் சொல்லப்பட்டாலும் எனக்கு அப்படி தோன்றவில்லை. என்னால் சாத்தியபடும் விஷயங்களில் மட்டுமே கவனம் இருக்கிறது.

நான் கற்று கொள்ள முயற்சிக்காமல் இல்லை - கார் கூட ஓட்ட கற்று கொண்டேன். ஏதோ மனம் ஒட்டவில்லை. இன்றெல்லாம் குழந்தைகளை சின்ன வயதிலேயே இருசக்கரவாகனங்களில் முன்னால் உட்காரவைத்து மனதளவில் சாலைக்கு பழக்கபடுத்தி விடுகிறார்கள். நான் சைக்கிளே ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதுதான் ஓட்ட கற்று கொண்டேன். நமக்கு வாகன யோகம் இல்லை என்பது அடிப்படையிலே தெரிந்து விட்ட சங்கதி - இதற்கு வருத்தபட்டு என்ன ஆக போகிறது. பிற்காலத்தில் தேவையிருந்தால் கற்று கொள்ளலாம். அதுவரைக்கும் வாகன யோகம் பற்றி ராசிபலனில் மட்டுமே பார்த்து கொண்டால் ஆயிற்று.

No comments: