அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Tuesday, November 10, 2009

பிடிக்கும், பிடிக்கும்... எனக்கும் பிடிக்கும்...


வாழ்வின் எந்த ஒரு விஷயமும் பிடித்து போவதற்க்கும், பிடிக்காமல் போவதற்க்கும் ஒரு நூலிழைதான் வித்தியாசத்தில் இருக்கிறது. மனிதர்களும், சம்பவங்களும், பொருள்களும் கூட அப்படித்தான். "பிடித்தல்" என்பது சுயம் சார்ந்த வாழ்வின் அடிப்படையோடு உணர்வு ரீதியாக உறவு கொள்ளும் விஷயங்களையே குறிக்கிறது என்பது மனோதத்துவம். "பிடிக்காதது" என்பது எதிர்மறையல்ல - அது ஒரு "அவ்வளவாக இணக்கமில்லை" எனும் கருத்தேயாகும். வெறுப்பதற்கும் பிடிக்காமல் போவதற்க்கும் வேறுபாடுகள் உணர்வோமாயின் வாழ்வின் எல்லாம் விஷயங்களையும் கொஞ்சம் சுலபமான பார்வையோடு அணுக முடியும்...

இந்த "தொடர் கருத்து" பதிவுகளுக்கு அழைத்தமைக்கு தோழிக்கு நன்றி. இந்த பதிவுக்கு சிந்திக்கும் போது - முதலில் தோன்றிய பெயர்களுக்கும், பின்னர் சிறு சிந்தனைக்கு பிறகு தோன்றிய பெயர்களுக்கும் வேறுபாடு இருந்தது உண்மை. எனினும் ரொம்ப பெரிய சிந்தனை எதுவும் இன்றி - எங்கள் (நானும் ரேவதியும்..) கருத்துகளை இணைக்கிறேன். விதிகளுக்கு உட்பட்டு மனிதர்களின் பெயர்களை மட்டும் குறிப்பிடுகிறேன் - இயக்கங்கள் அல்லது குழுக்கள், மனிதர்கள் அல்லாத பெயர்கள் (திரைப்படங்கள், இடங்கள்) ஆகியன தவிர்க்கபட்டிருக்கின்றன. அதுபோலவே விமர்ச்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என சில பிரபலங்களையும் கத்தரித்து இருக்கிறோம்.

இந்தப் பதிவோட விதிகள்:
1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும். (நீங்க எழுதறப்பவோ நாங்க அதைப் படிக்கறப்பவோ அவரு ஷீட்டிங்குக்கோ, மீட்டிங்குக்கோ வெளிநாடு போயிருக்கலாம்.. தப்பில்ல!)
2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்
3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். அவங்களை உங்களுக்கு இப்பத்தான் பிடிக்கல, பின்னாடி பிடிக்கலாம்ங்கற சமயத்தில தற்போது-ன்னு சேர்த்திக்கலாம்.
4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்.
5. இந்த லிஸ்டில் நீங்க சொல்றவரு இப்ப உயிரோட இருக்கணும்.

இயக்குனர்

ராதாமோகன், கவுதம் வாசுதேவ மேனன், கமலஹாசன் - இவர்களின் பல திரைப்படங்கள் ஏற்படுத்திய +உணர்வுகளுக்காக.

ஹரி, டி.ராஜேந்தர், எஸ்.ஜே.சூர்யா - இவர்களின் பல திரைப்படங்கள் ஏற்படுத்திய -உணர்வுகளுக்காக.

ஆன்மீகம் மற்றும் தத்துவம்

ஜக்கி வாசுதேவ் - தத்துவமும் ஆன்மீகமும் இணைந்த சிந்தனைகள்

நித்யானந்தர் - அதீத தத்துவ பிரயோகங்கள், வீண் விளம்பரங்கள்

எழுத்தாளர்

கி.ராஜநாராயணன், ரமேஷ்-பிரேம், எஸ். ராமகிருஷணன் - மனிதர்களை வேறு பரிமாணத்தில் அறிமுகம் செய்தமைக்காக

சாருநிவேதிதா, ரமணி சந்திரன்  - ஸ்டீரியோ டைப் எழுத்துகள்

இசையமைப்பாளர்

யுவன் சங்கர், ஹாரிஸ் ஜெயராஜ் - புதிய இசை

தேவா, விஜய் ஆண்டனி - சத்தங்கள் மற்றும் "பழைய" இசை

பேச்சாளர்கள்-பட்டிமன்றம்

நெல்லை கண்ணன் - தமிழய்யாவின் பேச்சு மொழி

லியோனி - சினிமா பாடல்களிலேயே உலகம்

ஓவியர்

மணியம் செல்வன், மாருதி, மருது, மதன் - வர்ணங்களும் கோடுகளும் கலந்திருக்கும் விதம், நவீன ஓவியங்கள்

அரஸ், ஜெயராஜ் - ஒரே மாதிரி சித்திர அமைப்பும் - வேறுபாடில்லாத உருவங்களும்

சின்ன திரை நட்சத்திரங்கள்

கோபிநாத், ரமேஷ் பிரபா, அனு ஹாசன் - கொஞ்சம் புத்திசாலித்தனம், ஸ்டுடியோவுக்கு வெளியிலான உலகம் பற்றிய கோணம்

ரபிக் பெர்நாட், கொஞ்சும் கிளிகள்-/தொகுப்பாளினிகள் - எல்லாம் குழப்பம்தான்

கவிதைகள் எழுதுபவர்

அய்யப்ப மாதவன், லீனா மணிமேகலை, சுகிர்த்தராணி, மனுஷ்யபுத்திரன் - புதிய சிந்தனைகள், வாசிப்பு அனுபவங்களை உருவாக்குதல்

தபு சங்கர் - உருகி உருகி எழுதினாலும் - காதலை வட்டத்துக்குள் பூட்டுதல்

தயாரிப்பாளர்

சங்கர், பிரகாஷ்ராஜ் - கொடுத்த திரைப்படங்கள்

கலாநிதிமாறன், உதயநிதி ஸ்டாலின் - கெடுத்த திரைப்படங்கள்

ஒளிப்பதிவாளர்

ஆர்.டி. ராஜசேகர் (காக்க காக்க, கஜினி, பீமா, சில்லுனு ஒரு காதல்...) - ஓவிய அமைப்பில் ஒளிபதிவு

மனோஜ் பரமாம்சா. (அரசாட்சி, பம்மல் க சம்பந்தம், மதுர, திருபாட்சி, திருப்பதி.. ) - வெளிச்சமும் இருட்டும் இன்னும் கைவரவில்லை

அவ்வளவுதான்..!!!

விவாதங்கள்கள் சுவரஸ்யமாக இருக்குமா - தெரியவில்லை.

நான் அழைக்கும் பதிவாளர்கள்- இவர்கள் எல்லாம் இந்த தொடர்பதிவில் பங்கேற்று விட்டார்களா தெரியவில்லை – எனக்கு தெரிந்து இல்லை. எனவே.

1. http://www.nilaraseeganonline.com/ - nilaraseegan@gmail.com

2. http://enninavinveliyilnan.blogspot.com/ - rajahparameswary@yahoo.co.in

3. http://maniyinpakkam.blogspot.com/ - pazamaipesi@gmail.com

3 comments:

பழமைபேசி said...

அழைப்புக்கு நன்றிங்க, விரைவில் இடுகை இடுகிறேன்!

நிலாரசிகன் said...

http://www.nilaraseeganonline.com/2009/11/blog-post_2438.html

ஸ்வர்ணரேக்கா said...

//ரமணி சந்திரன் - ஸ்டீரியோ டைப் எழுத்துகள்//

உண்மை..உண்மை.. ஆனால் என்னவோ நிறைய பேருக்கு அவரது எழுத்துக்கள் பிடிக்கும்..

மாருதியின் ஓவியமும்..ஒரே மாதிரி சித்திர அமைப்பு கொண்டது என்பது என் கருத்து...

பதில்கள் அருமை..