அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Tuesday, December 15, 2009

ஓரம் போ..!!

சென்னையின் ஆட்டோகாரர்கள் மேல் ஒரு நெடுநாள் குற்றச்சாட்டு உண்டு - அதிகமாக காசு வாங்குவதாக.. அது முற்றிலும் உண்மையில்லை - மிக மிக அதிகமாக காசுவாங்குகிறார்கள் என்பதுதான் உண்மை. ஆயிரம் காரணங்கள் சொல்கிறார்கள் எனினும் கீழ்காணும் காரணங்கள் பொதுவானவை.

1. மழை வருது/வெயில் அடிக்குது - [இதுக்கு யாரும் எதுவும் செய்ய முடியாது]
2. நைட் டைம் சார் - [50% சார்ஜ் அதிகம் என்பதையும் தாண்டி]
3. சுத்தி போகணும் சார் - [பெரும்பாலும் எங்கே போக வேண்டி இருந்தாலும் இதே கதைதான்]

மோசமான பேச்சு வார்த்தைகள் - அதீதமான திமிர் - முரட்டு மனப்பான்மை என பெருவாரியாக இதே நிலைதான். கட்டணத்தை பகிர்ந்து கொள்ளும் ஷேர் ஆட்டோக்கள் வந்த பின்னர் கொஞ்சம் அடங்கி இருக்கிறார்கள் - எனினும் ரயில்வே ஸ்டேஷனிலும், கோயம்பேட்டிலும் இன்னும் அராஜகம்தான். மாநகர பேருந்துகள் நிறம்பி வழிதல் குறைவதில்லை - அதுவே இவர்களை இன்னும் தீனி போட்டு வளர்க்கிறது.

எந்த அரசாங்கமும் இவர்களை கட்டுபடுத்துவதில்லை - முக்கியமாக சென்னையில். கோவையிலும் கூட. மீட்டர் போட வேண்டும் என்ற சட்டம் சுத்தமாக மதிக்கபடுவதில்லை. இவர்களின் ஓட்டுக்காக கட்டுபாடுகளை தளர்த்தி இருப்பதாக கொண்டால் - இவர்களால் அவமதிக்கபடும் மக்களின் ஓட்டு - அதற்க்கு மதிப்பு உண்டா.?

இன்று காலை டி.நகரில் இருந்து நுங்கம்பாக்கம் வரை 40 ரூபாய் கொடுத்ததுக்கு ஒரு ஆட்டோ டிரைவர் - சரியான சார்ஜ் இதுதான் சார் [அவர் 50 ரூபாய் கேட்டார்] - ரொம்ப நன்றி என்றார் - கிண்டலா? இல்லை நிஜமா என்று கூட தெரிவில்லை..!!

எந்த அரசாங்கமாவது தைரியமாக இந்த பூனைகளுக்கு மணிகட்டுமா..!!

No comments: